பட்டய கிளப்பும் பன்னீர் .....!!! 90%  எம்எல்ஏக்கள் ஒபிஎஸ்கு ஆதரவு....பொன்னையன் வாக்கால் குஷியோ குஷி....!!

ஒபிஎஸ்

அதிமுக கட்சி தற்போது இரண்டாக பிளவுபட்டு , பன்னீர் செல்வம் ஒரு அணியாகவும் , சசிகலா ஒரு அணியாகவும் பிரிந்தது. பின்னர் சசிகலா அணியில் பெரும்பாலான எம் எல் ஏக்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர். பின்னர் நேரம் செல்ல செல்ல , பன்னீர் அணிக்கு ஒவ்வொருவராக மாற ஆரம்பித்தனர்.

அணி மாற்றம் :

கோவை கவுண்டம்பாளையம் எம் எல் ஏ ஆறுக்குட்டி ஆரம்பித்து , மனோகரன், மனோரஞ்சிதம், மாணிக்கம், என பன்னீருக்கு ஆதரவு எம் எல் ஏக்கள் அதிகரிக்க தொடங்கினர். இந்நிலையில் அதிமுக அவைத்தலைவர் மது சூதனனே நேற்று , பன்னீர் அணிக்கு மாறினார் . பின்னர் மாபா பாண்டியராஜனும் பன்னீர் அணிக்கு தாவினார்

பொன்னையன் :

இந்நிலையில், எப்பொழுதும் கட்சிக்காக கொஞ்சம் சவுண்டு கொடுக்கும் பொன்னையன் அவர்கள், இன்று மாலை வரை தாக்குப்பிடித்து விட்டு, ஒரு கட்டத்தில் முடியாமல் பன்னீர் அணிக்கு திடீரென தாவியதால், முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு மேலும் பலம் கூடியது.

பொன்னையன் கருத்தால் குஷி :

தற்போது , பன்னீர் அணிக்கு தொடர்ந்து ஆதரவு பெருகி வரும் நிலையில், பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து பொன்னையன் ஆதரவு தெரிவித்தார். அப்போது பேசிய அவர், 90% எம்எல்ஏக்களின் ஆதரவு ஓபிஎஸ்க்கு உண்டு என தெரிவித்தார் இதனால், முதல்வர் பன்னீர் செல்வம் அணிக்கு பலம் கூடியது மட்டுமல்லாது, பன்னீரும் ஒரே குஷியாக உள்ளார் .

20 எம்.எல்.ஏக்கள் ஓபிஎஸ் பக்கம் வரத் தயார் - மாஃபா பாண்டியராஜன்

இந்நிலையில், மீண்டும் 20 எம்.எல்.ஏக்கள் ஓபிஎஸ் பக்கம் வரத் தயார் என , மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளதால் முதல்வர் அணி மேலும் வலுப் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், பன்னீர் அணியினர் குஷியோ குஷியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.