ஆக்சிஜன் விநியோகம் அதிகரிப்பு... மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை..!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மூடப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு மீண்டும் செயல்பட தொடங்கியது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மூடப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு மீண்டும் செயல்பட தொடங்கியது.
ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சை மையம் மூடப்பட்டது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்ல் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்ததால் மருத்துவமனையில் இருக்கும் அவசர சிகிச்சை மையம் மூடப்பட்டது. தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததையடுத்து ஆக்சிஜன் தேவையும் அதிகரித்தது. இதனால் கடுமையான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு கடும் சிரமங்களை சந்தித்து வருகிறது. இன்று மூடப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிர அவசர சிகிச்சை பிரிவு மீண்டும் செயல்பட தொடங்கியது.
ஆக்சிஜன் விநியோகம் அதிகரித்ததால் ஆக்சிஜன் குழாய் இணைப்புகள் மறுசீரமைக்கப்பட்டது. ஆக்சிஜன் விநியோகம் அதிகரித்ததால் ஆக்சிஜன் குழாய் இணைப்புகள் மறுசீரமைக்கப்பட்ட மீண்டும் செயல்பட்டு வருகிறது. இருப்பினும், டெல்லிக்கு 480 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தங்குதடையின்றி கிடைத்தால் மட்டுமே தலைநகரை காப்பாற்ற முடியும். இல்லை என்றால் டெல்லி சீரழிந்து விடும் என மாநில அரசு மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது.