Asianet News TamilAsianet News Tamil

'அடுத்தது என்ன?' - மாவட்ட நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் அவசர ஆலோசனை!!

ops meeting with supporters
ops meeting with supporters
Author
First Published Aug 5, 2017, 11:09 AM IST


முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில், மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

அதிமுக புரட்சி தலைவி அணி நிர்வாகிகள் கூட்டம் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில், சென்னை, கிரீன்வேஸ் இல்லத்தில் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் குடிநீர் பிரச்சனை, நீட் தேர்வு குளறுபடி உள்ளிட்டவைகள் குறித்து, இம்மாதம் 10 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்தை ஓ.பி.எஸ். அணியினர் அறிவித்துள்ளனர்.

ops meeting with supporters

ஓ.பன்னீர்செல்வம், தன் அணியை பலப்படுத்தும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளார். மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமிக்கும் முயற்சியிலும் ஓ.பன்னீர்செல்வம் இறங்கியுள்ளார். 

தனது ஆதரவு நிர்வாகிகள் அனைவரும் சென்னைக்கு வருமாறு பன்னீர்செல்வம் அழைப்பும் விடுத்தார்.

இந்த நிலையில், இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் மாவட்ட நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இந்த கூட்டத்தில் மதுசூதனன், கே.பி. முனுசாமி, செம்மலை, நத்தம் விஸ்வநாதன், பி.எச். பாண்டியன், மனோஜ் பாண்டியன், பொன்னையன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios