நீலகிரியில் மு.க. ஸ்டாலின் வெள்ளப்பாதிப்புகளை பார்வையிட சென்றது குறித்து  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, “எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் சீன் போட அங்கே சென்றுள்ளார்” என்று கடுமையாக விமர்சித்தார்.

எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் சீன் போட சென்றார் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்திருந்த நிலையில், மு.க. ஸ்டாலினை போல நீலகிரிக்கு போஸ் கொடுக்க வரவில்லை என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


 நீலகிரியில் வரலாறு காணாத மழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அவலாஞ்சி பகுதி கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளப் பாதிப்பை பார்வையிட முதல் ஆளாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நீலகிரி சென்றார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். திமுக சார்பில் நிவாரணப் பணிகளுக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.