இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் கட்சிகள் அனைத்தும் காங்கிரஸ் தலைமையில் செயல்பட இந்த இந்தக் கூட்டம் உதவும் என்றும் காங்கிரஸ் நம்புகிறது. எதிர்பார்ப்பதுபோல பாஜக கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்காமல் போகும்பட்சத்தில் கூட்டணி கட்சிகளின் உதவியுடன் காங்கிரஸால் ஆட்சி அமைக்க முடியும் என்றும் அக்கட்சி கருதுகிறது.

மே 23-க்கு பிறகு ஆட்சி அமைப்பதற்கான முஸ்தீபுகளை எதிக்கட்சிகள் தொடங்கியுள்ளன. அதன் முக்கிய நகர்வாக பாஜக ஆட்சி அமைவதைத் தடுக்க இறுதிகட்ட தேர்தல் முடிந்த பிறகு எதிர்க்கட்சிகள் கூடி பேச திட்டமிட்டுள்ளன. 
 நாடாளுமன்றத் தேர்தலுக்கு 5 கட்டமாக வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. இன்னும் இரண்டு கட்ட வாக்குப்பதிவு மட்டுமே பாக்கியுள்ளன. மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் நம்பிக்கையில் பாஜக உள்ளது. இதேபோல இந்த முறை பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்று எதிர்க்கட்சிகளும் நம்பிக்கையில் உள்ளன.


இதற்கிடையே மே 23-க்கு பிறகு ஆட்சி அமைக்கும் பணிகளையும் பாஜக ஆட்சி அமைவதை தடுக்கும் பணிகளையும் எதிர்க்கட்சிகள் தொடங்கியுள்ளன. பாஜக - காங்கிரஸ் இல்லாத ஆட்சி அமைய டி.ஆர்.எஸ். கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் மாநில கட்சித் தலைவர்களைச் சந்தித்து பேசத் தொடங்கியிருக்கிறார்.