ஆபரேஷன் லோட்டஸ் என்ற பெயரில் பாஜக எங்கள் எம்எல்ஏக்களுக்கு எவ்வளவு அதிகமான அழுத்தத்தை கொடுத்தாலும், எங்களை  அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என கர்நாடகா முதலலமைச்சர்  குமாரசாமி தெரிவித்துள்ளார்.

தற்போது கர்நாடகவில்மதசார்பற்றஜனதாதளம்மற்றும் காங்கிரஸ்கட்சியின் கூட்டணிஆட்சிநடைபெற்று வருகிறது.. இந்தநிலையில்காங்கிரஸ்கட்சியைசேர்ந்த 3 எம்எல்ஏ-க்கள்பாஜகவில்இணையபோவதாகவும், அதனால்அந்த 3 எம்எல்ஏ-க்களும்மும்பைசென்றுள்ளதாகதகவல்கள்வெளியாகின.

அதுமட்டுமல்லாமல் அதிருப்தியில்உள்ள 12 காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் சேர உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் பெங்களூருவில் காங்கிரஸ்தலைவர்களின்ஆலோசனைக்கூட்டம்நடைபெற்றது. இந்திக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகாமாநிலதுணைமுதலமைச்சர் பரமேஸ்வரா, காங்கிரஸ்கட்சியைசேர்ந்த 3 எம்எல்ஏ-க்கள்குறித்தவெளியானசெய்திஉண்மைஇல்லை என தெரிவித்தார். அந்த 3 எம்எல்ஏக்களும் சொந்த விஷயமாக மும்பை சென்றுள்ளார்கள் என தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த கர்நாடகமுதலமைச்சர் குமாரசாமி, மும்பைசென்றுள்ளகாங்கிரஸ்கட்சியைசேர்ந்த 3 எம்எல்ஏ-க்களும் எங்களுடன் தொடர்பில்தான்இருக்கிறார்கள்என கூறினார்.

அவர்கள்எங்களிடம்கூறிவிட்டுதான்மும்பைசென்றன என்றும், அதனால்எங்கள்ஆட்சிக்குஎந்தவிதமானஅச்சுறுத்தலும்இல்லை எனவும் தெரிவித்தார்.

அதே நேரத்தில் எங்கள்எம்எல்ஏ-க்களைபாஜகவிலைக்குவாங்கபார்க்கிறது என்பதை ஒப்புக் கொண்டார். ஆனால் இதுக்குறித்துபீதியடையதேவையில்லை எனவும் . எங்கள்கூட்டணிஆட்சிதொடரும் எனவும் கூறினார்.

பாஜக மேற்கொள்ள முயற்சிக்கும் ஆபரேஷன் லோட்டஸ் எந்தவிதத்திலும் அவர்களுக்கு பயன் அளிக்காது என்ற குமாரசாமி இதுக்குறித்துஊடகங்கள்கவலைப்படவேண்டியதில்லை என்றும் தெரிவித்தார்.