Nominations close tomorrow with a double leaf - titivitinakaran Cool Interview
இரட்டை இலை சின்னத்துடன் நாளை வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாக அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதற்கான விடையை தேர்தல் ஆணையம் இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் தலைமை ஆணையர் நசீம் ஜைதி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த பரபரப்பான சூழலில் சென்னையில் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், இரட்டை இலை சின்னம் தங்களுக்கே கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இரட்டை இலை சின்னத்துடன் நாளை வேட்புமனு தாக்கல் செய்யப் வோவதாகவும், நாளை மாலை முதல் தேர்தல் பரப்புரையில் ஈடுபட இருப்பதாகவும் தினகரன் அப்போது கூறினார்.
