பாஜகவுடன் கூட்டணி அமைக்க அதிமுக அமைச்சர்கள் சிலர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் அக்கட்சியுடன் கூட்டணி வேண்டாம் என்றும் கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர் தொகுதிகளில் பாஜகவை எதிர்த்து அதிமுக வேட்பாளர்களை நிறுத்தாது என்றும் தேர்தலுக்குப் பிறகு ஆதரவு அளிக்கிறோம் என்றும் எடப்பாடி பழனிசாமி பாஜக தலைவர்களிடம் சொல்லியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கானஆயத்தப்பணிகளை, தேர்தல்கமிஷன்துவக்கிவிட்டது. அதேபோல், அனைத்துகட்சிகளும், தேர்தலில்வெற்றிபெறுவதற்காக, பலமானகூட்டணியைஅமைக்கும்பணிகளை தொடங்கியுள்ளன..
மோதல், அதிருப்திகளைபுறந்தள்ளி, வெற்றியைமட்டும்குறிக்கோளாககொண்டு அனைத்துகட்சிதலைவர்களும், ஒவ்வொருகட்சியுடனும், ரகசியபேச்சுநடத்திவருகின்றனர்.

தமிழகத்தைபொறுத்தவரை,தி.மு.க., - காங்கிரஸ்கூட்டணிஉறுதியாகிஉள்ளது. இதில், ம.தி.மு.க., - விடுதலைசிறுத்தைகள், கம்யூனிஸ்ட்கள், முஸ்லிம்லீக்உட்பட, பலகட்சிகள்இடம்பெறவாய்ப்புள்ளது.
இக்கூட்டணிக்குஎதிராக, அ.தி.மு.க.,- பா.ஜ., கூட்டணிஅமையும்என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு இருப்பதால் அந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என அமைச்சர்கள் சிலர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

அதே போல் பாஜகவையும், மத்தியஅரசையும்நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கடுமையாகவிமர்சித்துபேசி வருகிறார்.
.
மேலும் அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைகூட்டத்துக்குபின், அமைச்சர்களிடம்தனியாகபேசியமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாஜககூட்டணியால்ஏற்படும்நன்மைகளைவிளக்கிஉள்ளார்.

ஆனால் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஓபிஎஸ் உள்ளிட்ட சில அமைச்சர்கள் தவிர மற்ற அமைச்சர்களும், எம்.பி.க்களும் பாஜக கூட்டணியை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். முக்கியமாக சி.வி.சண்முகம், செல்லூர் ராஜு போன்ற அமைச்சர்கள் பாஜக கூட்டணிக்கு எதிராகவே பேசி வருகின்றனர்.

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் நாம் அவர்களுக்கு அடிமைகள் போல் இருக்க வேண்டும் என அதிமுக எம்.பி.க்களும் கூறி வருகின்றனர், கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு கிளம்புவதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிரண்டு போயுள்ளார்.
இதையடுத்து பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என அதிமுக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

அதே நேரத்தில் கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர் தொகுதிகளில் பாஜக போட்டியிடும் பட்சத்தில் அந்த தொகுதிகளில் அதிமுக போட்டியிடாமல் அதன் வெற்றிக்கு பாடுபடுவது என்றும், தேர்லுக்குப் பிறகு பாஜகவுக்கு முழு ஆதரவு அளிப்பது என்றும் எடப்பாடி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
