Asianet News TamilAsianet News Tamil

பாஜகவிற்கு பாடை தயாராகிறது…. நாஞ்சில் சம்பத் ‘பொளேர்’ ட்வீட்

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பாடை தயாராகிறது என்பதை காட்டுவதாக நாஞ்சில் சம்பத் கருத்து தெரிவித்து உள்ளார்.

Nanjil sampath tweet
Author
Chennai, First Published Oct 12, 2021, 8:06 PM IST

சென்னை: உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பாடை தயாராகிறது என்பதை காட்டுவதாக நாஞ்சில் சம்பத் கருத்து தெரிவித்து உள்ளார்.

Nanjil sampath tweet

தமிழகத்தில் நடைபெற்ற 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. விறுவிறுப்பும் சுவாரசியமாகவும் இருந்த தேர்தல் முடிவுகளில் திமுக பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி அசத்தி இருக்கிறது.

எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு இந்த உள்ளாட்சி தேர்தல் படுதோல்வியாக அமைந்திருக்கிறது. தேர்தல் முடிவுகள் அக்கட்சிக்கு அதிர்ச்சியாக இருக்கும் சமயத்தில் விரைவில் இது குறித்து கட்சியின் முக்கிய தலைவர்கள் ஆலோசனை நடத்துவார்கள் என்று தெரிகிறது.

இந் நிலையில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பற்றி நாஞ்சில் சம்பத் வெளியிட்டு உள்ள ஒரு டுவிட்டர் பதிவு பேசப்படும் பதிவாக மாறி இருக்கிறது. அந்த டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

Nanjil sampath tweet

திமுக வானை நோக்கி நகர்கிறது, அதிமுக சசிகலா தலைமையை நோக்கி நகர்கிறது, பாஜகவிற்கு பாடை தயாராகிறது…. வாழ்க வாக்காளர்கள் என்று நாஞ்சில் சம்பத் சம்மட்டியாய் தமது கருத்தை பதிவிட்டு தள்ளியுள்ளார்.

திமுக வெற்றி முகத்திலும், அதிமுக தோல்வி முகத்திலும் உள்ளதை சொல்லி உள்ள அவர் சசிகலா அதிமுக தலைமையை ஏற்க வேண்டும் என்ற காலம் வந்துவிட்டதாகவும் சூசகமாக குறிப்பிட்டு உள்ளார். இவை எல்லாவற்றையும் பாஜகவிற்கு பாடை தயாராகிறது என்று அவர் கூறியுள்ளது நெட்டிசன்கள் இடையே ஆதரவு, எதிர்ப்பு என பலத்த விமர்சனங்களை முன் வைத்து வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios