Nanjil sambath speech against OPS and EPS

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் மாட்டுத்தரகர் என காட்டமாக விமர்சித்துள்ளார் அதிமுகவின் தினகரன் அணியை சேர்ந்த நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத்.

கடந்த சில நாட்களாக சசிகலா குடும்பத்தை மீது நடத்தப்பட்டிருக்கும் மெகா ரெய்டை நடத்தியது வருமான வரித்துறை. இதனையடுத்து நேற்று முன்தினம் போயஸ் கார்டனுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தியது. வருமானவரித்துறையில் இந்த ரெய்டால் அதிமுகதீவிர விசுவாசிகளை எரிச்சலடைய வைத்தது. இதற்கு தினகரன் அப்போதே போயஸ் கார்டன் முன்பு பாஜகவிற்கு எதிரான கோஷங்களை போட்டு போராட்டம் செய்தனர். 



மேலும் எனக்கு அருதிப்பெரும்பான்மை இருக்கிறது, ஆட்சி அமைக்க அழையுங்கள் என்று சசிகலா கடிதம் கொடுத்தப் பிறகு அழைக்காமல் தாமதப்படுத்தியது யார்? ஆகவே இந்த ரெய்டில் மிகப்பெரிய அரசியல் பின்னணி, அரசியல் சதி, அரசியல் வன்மம் இருக்கிறது என காட்டமாக கூறியுள்ளார் நாஞ்சில் சம்பத்.