Asianet News TamilAsianet News Tamil

இரண்டு தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு ! சீமான் அதிரடி !!

விக்கிரவாண்டி, நாங்குனேரி மற்றும் புதுச்சேரி மாநிலம்  காமராஜர் நகர்  ஆகிய தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தல்களில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

Nam tamilar candidate announced
Author
Chennai, First Published Sep 25, 2019, 8:32 PM IST

தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் ராதாமணி மரணம் அடைந்து விட்டதாலும், நாங்குனேரி தொகுதி எம்எல்ஏவாக இருந்த வசந்தகுமார், மக்களவைத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றதால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். 

எனவே இந்த இரண்டு தொகுதிகளும் காலியாக உள்ளன. இதே போல் புதுச்சேரி மாநிலம் காமராஜர் நகர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ வைத்திலிங்கம் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆனதால் அந்த தொகுதியும் தற்போது காலியாக  உள்ளது.

Nam tamilar candidate announced

இந்த மூன்று தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் அதிமுக மற்றும் திமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி போட்டியிடும் நாங்குநேரி, காமராஜர் நகர் ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளர்களை இதுவரை அறிவிக்கவில்லை.

Nam tamilar candidate announced

இந்த தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக, கமலின் மக்கள் நீதி மய்யம் ஆகியவை போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளன.  இந்நிலையில் சீமானின் நாம் தமிழர் கட்சி இடைத்தேர்தல்களில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.

Nam tamilar candidate announced

அதன்படி விக்கிரவாண்டி தொகுதியில் சமூக செயற்பாட்டாளரான கு கந்தசாமி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.  நாங்குநேரியில் சா.ராஜநாராயணன் நாம் தமிழர் சார்பில் போட்டிடுகிறார். 

Nam tamilar candidate announced

இதே போல் புதுச்சேரி மாநிலம்  காமராஜர் நகரில் பிரவினா மதியழகன் நாம் தமிழர் சார்பில் போட்டிடுகிறார். இவர் அக்குபஞ்சர் பட்டயப் படிப்பு  படித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios