mythreyan pressmeet irattai ilai debate
இரட்டை இலை சின்னம் தங்களுக்கே வழங்கப்படும் என்று ஓ.பி.எஸ்.ஆதரவாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்ரேயன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்குப் பின்னர் மைத்ரேயன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "மதுசூதனன் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விவாதங்கள் நடைபெற்றது. இரட்டை இலைச்சின்னம் எங்களுக்கே சொந்தமானது என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களை சமர்பித்துள்ளோம்.
எங்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதங்களை அழுத்தமாக முன்வைத்துள்ளார். இரட்டை இலைச் சின்னம் எங்களுக்கே ஒதுக்கப்படும் என்று முழுமைாயாக நம்புகிறோம்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.
