Asianet News TamilAsianet News Tamil

ஃபுல் மெஜாரிட்டியோடு மீண்டும் பிரதமராகும் மோடி!! அதிரிபுதிரியாய் அல்லுதெறிக்கும் எக்ஸிட் போல்

இந்தியாவில் ஏழு கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிகரமாக  நடந்து முடிந்துள்ளது.  இதனைத் தொடர்ந்து மத்தியில் எந்த கட்சி ஆட்சி அமையும் என்பது தொடர்பான எக்ஸிட் போல் ரிசல்ட் வெளியாகி காங்கிரசை அதலபாதாளத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.   

Modi again PM TIMES NOW-VMR 2019 Exit Poll National (Overall) Tally
Author
Chennai, First Published May 19, 2019, 7:18 PM IST

இந்தியாவில் ஏழு கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிகரமாக  நடந்து முடிந்துள்ளது.  இதனைத் தொடர்ந்து மத்தியில் எந்த கட்சி ஆட்சி அமையும் என்பது தொடர்பான எக்ஸிட் போல் ரிசல்ட் வெளியாகி காங்கிரசை அதலபாதாளத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.   

TIMES - VMR இணைந்து நடத்திய எக்ஸிட் போல் ரிசல்டில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என துல்லியமாக சொல்கிறது. இதில், பாஜக அணி- 306 ( 41.1%)  காங்கிரஸ் அணி- 132 (31.7%) இதர கட்சிகள் 132 (27.2%) என வெல்லும் என தெரிகிறது.

NEWS 18 TAMILNADU சேனலின் எக்ஸிட் போல் ரிசல்டிலும் பாஜகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிஜேபி - 292 முதல் 312 சீட் ஜெயிக்கும், காங்கிரஸ் - 62 முதல் 72 ஜெயிக்கும் எனவும், மற்ற கட்சிகள் 102 முதல் 112 தொகுதிகளில் ஜெயிக்கும் என கூறியுள்ளது.

சி வோட்டரின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பில் பிஜேபியே  மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெளிவாக தெரிகிறது, இதில் பிஜேபி அணி - 287 தொகுதிகளிலும், காங்கிரஸ் 128 தொகுதிகளையும், பகுஜன்-சமாஜ்வாதி - 40 தொகுதிகளும், இதர கட்சிகள் 87 வெல்லும் எனது தெளிவாக வெளியிட்டுள்ளது. 

இந்தியா டுடே கருத்து கணிப்பில் தமிழ் நாட்டில் ஜெயிக்கப்போவது யார் என திமுக அணி 34-38 இடங்களைக் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Follow Us:
Download App:
  • android
  • ios