Asianet News TamilAsianet News Tamil

திமுகவினர் கண் கொத்திப் பாம்பாக இருக்க வேண்டும்... அறிக்கையிலேயே தெறிக்கவிடும் மு.க.ஸ்டாலின்..!

திமுகவினரும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் விழிப்புணர்வுடன் இருந்து வாக்கு எந்திரங்களை பாதுகாக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

MK Stalin Report
Author
Tamil Nadu, First Published Apr 21, 2019, 2:56 PM IST

திமுகவினரும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் விழிப்புணர்வுடன் இருந்து வாக்கு எந்திரங்களை பாதுகாக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைத்திருக்கும் அறைக்குள் பெண் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் சிலர் அதிகாலை 3 மணி அளவில் உள்ளே நுழைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். MK Stalin Report

2 மணி நேரத்திற்கும் மேல் அங்கேயே இருந்து வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்வதில் அவர்கள் ஈடுபட்டார்கள் என்பது அதிர்ச்சி அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினரின் முழுப் பாதுகாப்பில் இருக்கும் போது, அரசு அதிகாரிகள் அத்துமீறி நுழைந்ததும் முறைகேடுகள் செய்ததும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். MK Stalin Report

துணை இராணுவத்தினரின் பாதுகாப்பில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தலைமைத் தேர்தல் அதிகாரியால் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியவில்லை என்பது கடும் கண்டனத்திற்குரியது என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமா? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்திருப்பதாகவும் திமுக தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் துணை ராணுவத்தின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அதிகாலையில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைந்த அனைவர் மீதும், அதற்கு அனுமதி கொடுத்த அதிகாரிகள், நுழைய விட்டு பாதுகாப்பு கொடுத்தவர்கள் அனைவர் மீதும் கிரிமினல் வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். MK Stalin Report

மேலும் வாக்கு எண்ணும் மையங்களில் கழக நிர்வாகிகளும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் இரவு பகல் பார்க்காமல் விழிப்புணர்வுடன் இருந்து வாக்கு எண்ணிக்கை மையங்களைக் கைப்பற்ற நினைக்கும் அராஜக அதிமுக ஆட்சியிடமிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios