Vaiko : மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு “கொரோனா”
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
தமிழகத்தில் தற்போது கொரோனா 3-வது அலை பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை, 2.14 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுகின்றனர். தினசரி பாதிப்பு, 28 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது. சிகிச்சை பெறுபவர்களில், 94.8 சதவீதம் பேர் வீட்டு தனிமையிலும், 5.2 சதவீதம் பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர்’ என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தநிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். கொரோனா உறுதியானதை தொடர்ந்து இல்லத்தில் தனிமைப்படுத்தி கொண்டார் வைகோ. இதைத் தொடர்ந்து வீட்டிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.