“‘ஒன்றிணைவோம் வா’ மூலம் உதவி பெற்ற பல லட்சம் பயனாளிகளில் ஒருவரான ஈரோட்டைச் சேர்ந்த கு.தங்கராஜ் என்னும் அ.தி.மு.க உறுப்பினர் அனுப்பியுள்ள நெகிழச் செய்யும் கடிதம் இது. ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டமே சாதி, மதம், கட்சி பாகுபாடின்றி உதவுவதுதான். திமுகவின் இத்தொண்டு என்றும் தொடரும்!” என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

அதிமுகவின் உறுப்பினர் அட்டையைக் கிழித்துவிட்டேன் என்று ஈரோட்டைச் சேர்ந்த அதிமுக தொண்டர் எழுதிய கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது கட்டமாக மே 4 முதல் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தை திமுக அறிவித்தது. இத்திட்டத்தின்படி அறிவிக்கப்பட்டுள்ள எண்ணுக்கு அழைப்போருக்கு உணவு பொருட்கள் வழங்கப்படும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். மேலும் தினந்தோறும் லட்சம் பேருக்கு 25 நகரங்களில் உணவு வழங்கப்படும் என்றும் ஸ்டாலின் அறிவித்தார்.


இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று ஒரு கடித்தத்தை பகிர்ந்திருந்தார். மேலும் ட்விட்டர் பதிவில், “‘ஒன்றிணைவோம் வா’ மூலம் உதவி பெற்ற பல லட்சம் பயனாளிகளில் ஒருவரான ஈரோட்டைச் சேர்ந்த கு.தங்கராஜ் என்னும் அ.தி.மு.க உறுப்பினர் அனுப்பியுள்ள நெகிழச் செய்யும் கடிதம் இது. ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டமே சாதி, மதம், கட்சி பாகுபாடின்றி உதவுவதுதான். திமுகவின் இத்தொண்டு என்றும் தொடரும்!” எனத் தெரிவித்துள்ளார்.