last moments of admk symbol debate
இரட்டை இலை சின்னம் தொடர்பாக சசிகலா, ஓ.பி.எஸ். தரப்பினரிடம் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி முடித்துள்ளது. இன்னும் சற்றும் இறுதி முடிவை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில், தலைமை ஆணையர் நசீம் ஜைதி தலைமையில் இன்று விசாரணை நடைபெற்றது.

இதில் சசிகலா, ஓ.பி.எஸ். ஆகிய இரு அணிகளும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். மூத்த நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் என அனைவரும் தங்கள் பக்கமே இருப்பதாக ஓ.பி.எஸ்.சும்., 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தங்களுக்கே இருப்பதாக சசிகலாவும் தங்களது தரப்பு வாதத்தை முன்வைத்தனர்.

இதற்கிடையே இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த தேர்தல் ஆணையம், இன்று மாலைக்குள் தனது இறுதி முடிவை அறிவிக்க உள்ளது.
