முன்னாள் அமைச்சரும் டி.டி.வி.தினகரனின் வலது கையுமான செந்தில் பாலாஜியின் கோட்டையான கரூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகி நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை முன்னிலையில் அதிதிமுகவில் இணைந்தனர்.

கரூர் என்று சொன்னாலே அதிமுக தொண்டர்களுக்கு முதலில் ஞாபகம் வருவது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிதான். அந்த அளவுக்கு கரூர் மாவட்டத்தில் தொண்டர்களை தனது பிடிக்குள் வைத்திருந்தார்.

நாடாளுமன்ற சபாநாயகர் தம்பிதுரை கரூர் தொகுதியில் எம்.பி. தேர்லில் நின்றபோது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா முன்பு தொண்டர்களை லட்சக்கணக்கில் திரட்டி மாஸ் காட்டியவர்தான் செந்தில் பாலாஜி/

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்து, டிடிவி. தினகரன் தலைமையில் அமமுக உருவானது, தற்போது தினகரனின் முக்கிய தளபதியாக உள்ளார் செந்தில் பாலா.

மிகவும் நெருக்கம் காட்டிய தம்பிதுரை போன்றோர் செந்தில் பாலாஜிக்க எதிராக தற்போது செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கரூர்அமமுகவினர் 1300 பேர்அக்கட்சியிலிருந்துவிலகிஅதிமுகவில்இன்று இணைந்தனர்.

க்களவைதுணைசபாநாயகர்தம்பிதுரைமற்றும் அமைச்சர்எம்.ஆர். விஜயபாஸ்கர்மற்றும் கிருஷ்ணராயபுரம்தொகுதிசட்டமன்றஉறுப்பினர் _கீதாஅவர்கள்ஆகியோர்முன்னிலையில் 1300 பேர் அதிமுகவில்இணைந்தனர்.

கரூர்மாவட்டம். பரமத்திபகுதியைச்சேர்ந்தஅமமுக, திமுகமற்றும்பல்வேறுகட்சிகளைச்சேர்ந்தஆயிரத்துக்கும்மேற்பட்டோர்அந்தந்தகட்சியிலிருந்துவிலகிஅம்மாமக்கள்முன்னேற்றக்கழக , .பரமத்திதெற்குஒன்றியதுணைசெயலாளர்.கருப்புசாமிஆகியோர் அதிமுகவில்இணைந்தனர்.

தற்போது அமமுகவில் இருந்து தொண்டர்களை இழுக்கும் படலம் தொடங்கியுள்ளதால் தினகரன் தரப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.