Asianet News TamilAsianet News Tamil

நானும் வெள்ளாள கவுண்டந்தான்... தில் இருந்தால் கருணாஸ் என்னை தொட்டுப் பார்க்கட்டும் .... அதிமுக எம்எல்ஏ கனகராஜ் ஆவேசம்!!

கவுண்டர் ஜாதியைச் சேர்ந்த  எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானது  நாங்கள் போட்ட பிச்சை என நடிகர் கருணாசின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ  கனகராஜ் , நானும் வெள்ளாள கவுண்டந்தான்... தில் இருந்தால் கருணாஸ் என்னை தொட்டுப் பார்க்கட்டும்  என சவால் விடுத்துள்ளார்.  

 

kanagaraj mla  challenge karunas
Author
Coimbatore, First Published Sep 21, 2018, 11:10 PM IST

சென்னையில் கடந்த ஞாயிறன்று முக்குலத்தோர் புலிப்படை கட்சியினர் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது. அன்றைய தினம் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றதால் கருணாஸ் அன்று பேசியது பெரிய அளவில் விவாதமாகவில்லை. இந்த நிலையில் ஆர்பாட்டத்தின் போது பல்வேறு ஜாதிகளுக்கு எதிராக விஷமத்தனத்துடன் கருணாஸ் பேசியது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

kanagaraj mla  challenge karunas

அதில், கூவத்தூர் என்று ஒன்று இருப்பதை சசிகலாவிடம் தெரிவித்ததே தான் தான் என கருணாஸ் கூறினார்.. மேலும் கூவத்தூர் விடுதிக்கு ஒரே ஒரு பாதை தான் என்றும் மூன்று பக்கமும் கடல் என்பதாலும் எவனாலும் ஓட முடியாது என்று கூறி அங்கு எம்.எல்.ஏக்களை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்ததும் தான் என்று கருணாஸ் தெரிவித்தார்.

 மேலும் கூவத்தூரில் வைத்து எம்.எல்.ஏக்கள் பலரும் தினகரன் காலில் விழுந்ததை தான் பார்த்ததாக தெரிவித்தார். தற்போது முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமி, தினகரன் காலில் விழுந்ததாகவும் கருணாஸ் கூறியுள்ளார்.

kanagaraj mla  challenge karunas

மேலும் எக்குலமும் வாழ வேண்டும் என்றால் முக்குலம் ஆள வேண்டும் என்று அன்றே சொல்லி வைத்திருப்பதாக கருணாஸ் குறிப்பிட்டார்.. வரலாற்றை எடுத்துப் பார்த்தால் மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஒரே இனம் முக்குலத்தோர் இனம் தான் என்பது தெரியும் என்று அவர் தெரிவித்துள்ளார். வேறு எந்த ஜாதிக்காரனும் மூன்று முறை முதலமைச்சராகவில்லை என்றும் கருணாஸ் ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது தெரிவித்தார்.

கவுண்டரான ஒருவர் முதலமைச்சரானது நாங்கள் போட்ட பிச்சை என்று நடிகர் கருணாஸ் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கவுண்டருக்கு முதலமைச்சர் பதவியை பிச்சையாக போட்டதே சசிகலா உள்ளிட்ட நாங்கள் தான் என்று கருணாஸ் தெரிவித்துள்ளார். கருணாசின் இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

kanagaraj mla  challenge karunas

இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய சூலூர் சட்டமன்ற அதிமுக உறுப்பினர் கனகராஜ், கருணாசின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார், தொடர்ந்து பேசிய அவர் நானும் வெள்ளாள கவுண்டந்தான்... தில் இருந்தால் கருணாஸ் என்னை தொட்டுப் பார்க்கட்டும் என சவால் விடுத்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios