தேர்தலில் கொடுத்த வாக்குறுதிபடி 10 நாட்களில் விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என மத்திய பிரதேச மாநில முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமல்நாத் உறுதி அளித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் பெரும்பான்மைபெற 116 இடங்கள்தேவைஎன்றநிலையில்அங்கு நடைபெற்ற தேர்தலில்காங்கிரஸ் கட்சிக்கு 114 இடங்கள்மட்டுமேகிடைத்தன. ஆட்சிஅமைக்க 2 எம்எல்ஏ.,க்கள்குறைவாகஇருந்தநிலையில்காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவுஅளிப்பதாக தலா 1 எம்எல்ஏவைக் கொண்டுள்ள பகுஜன்சமாஜ்கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் அறிவித்தது
இந்நிலையில் அம்மாநில முதலமைச்சரை தேர்வுசெய்வதில்காங்கிரஸ் கட்சிக்குள் . இழுபறிநீடித்தது. முதலமைச்சரைதேர்வுசெய்வதற்காககாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்கூட்டம்நேற்று இரவு போபாலில்நடந்தது. இதில்மூத்ததலைவர்கள்ஏ.கே. அந்தோணி, ஜோதிராதித்யாசிந்தியா, திக்விஜய்சிங்உள்ளிட்டோர்கலந்துகொண்டனர்.
கூட்டமுடிவில்கமல்நாத்முதலமைச்சராக ஒருமனதாகதேர்வுசெய்யப்பட்டார். இதையடுத்து இன்று காலை அவர் முதலமைச்சராக பதவியேற்கிறார். அவருக்கு காங்கிரஸ் கட்சி . டுவிட்டர்மூலம்வாழ்த்துதெரிவித்துள்ளது. 72 வயதானகமல்நாத் 9 முறைஎம்.பி.யாகதேர்வுசெய்யப்பட்டார். இவர் முன்னாள்மத்தியஅமைச்சராகஇருந்தார்.

அவர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தேர்தலில்கொடுத்தவாக்குறுதிபடி 10 நாட்களில்விவசாயிகள்கடன்தள்ளுபடிசெய்யநடவடிக்கைஎடுக்கப்படும்எனகூறினார்.
