இலங்கை பிரதமராக ராஜபக்சே பொறுப்பேற்றுள்ளதை மக்கள் நீதி மய்யம் கட்சி வரவேற்கவில்லை என்றாலும், அவர்,  தமிழ் மக்களிடம் முன்பு போல் நடந்து கொள்ள மாட்டார் என்று நம்புவோம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இலங்கைஅதிபரானசிறிசேனா, அந்நாட்டின்பிரதமர்ரணில்விக்கிரமசிங்கேவைபதவியில்இருந்துநீக்கிஉத்தரவிட்டார். அதே நேரத்தில் முன்னாள்அதிபர்ராஜபக்சேவைபிரதமராகநியமித்து, பதவிப்பிரமாணம்செய்துவைத்தார். மேலும் இலங்கைஅரசில்இருந்துசிறிசேனாகட்சிவிலகியது. இந்தவிவகாரம்சர்வதேசஅரங்கில்சலசலப்பைஏற்படுத்திஉள்ளது

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சிறிசேனாவின்அறிவிப்பைநிராகரித்தரனில்விக்ரமசிங்கே, தனக்குபோதுமானஎண்ணிக்கைஇருப்பதாகவும், உடனேநாடாளுமன்றத்தைகூட்டவேண்டும்என்றுகோரியிருந்தார்

இந்தநிலையில், இலங்கைநாடாளுமன்றத்தைதற்காலிகமாகமுடக்குவதாகஇலங்கைஅதிபர்சிறிசேனாஅறிவித்துள்ளார். இலங்கை பிரதமராக ராஜபக்சே பொறுப்பேற்றதை அங்குள்ள தமிழர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

மேலும் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின், வைகோ, பழ.நெடுமாறன், சீமான் உள்ளிட்ட தலைவர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். பாஜக எம்.பி. சுப்ரமணியன்சாமி மட்டுமே இதனை வரவேற்றுள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், இலங்கை பிரதமராக ராஜபக்சே பொறுப்பேற்றுள்ளதை மக்கள் நீதி மய்யம் கட்சி வரவேற்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் ராஜபக்சே தமிழ் மக்களிடம் முன்பு போல் நடந்து கொள்ள மாட்டார் என்று நம்புவோம் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தமிழக மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.