‘ஆப்பு’ வைத்த தமிழ்நாடு போலீஸ்… பாஜக பிரமுகர் கல்யாணராமன் டுவிட்டர் பக்கம் முடக்கம்..!
பாஜக பிரமுகர் கல்யாணராமனின் டுவிட்டர் பக்கத்தை டுவிட்டர் நிறுவனம் முடக்கி இருக்கிறது.
சென்னை: பாஜக பிரமுகர் கல்யாணராமனின் டுவிட்டர் பக்கத்தை டுவிட்டர் நிறுவனம் முடக்கி இருக்கிறது.
பாஜகவின் கல்யாணராமன் என்பவர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பான பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.
தொடர்ந்து வன்முறை தூண்டுதல், மத மோதல்களை உருவாக்குவது தொடர்பான கருத்துகளை கூறி வந்ததால் அவரது பக்கத்தை முடக்க வேண்டும் என்று டுவிட்டர் நிறுவனத்துக்கு தமிழக காவல்துறை பரிந்துரை அனுப்பியது.
இதை ஏற்ற டுவிட்டர் நிறுவனம் கல்யாணராமன் டுவிட்டர் பக்கத்தை முடக்கி இருக்கிறது. அவர் பதிவிட்டுள்ள பதிவுகள் மத மோதல்களை தூண்டும் வகையில் இருப்பதாக உறுதி செய்ததால் டுவிட்டர் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்து இருக்கிறது.