அம்மா என்ற அன்பான வார்த்தையை அரசியல் அஸ்திரமாகமாற்றி கொண்டவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.அவர் குறித்த சில சுவாரஸ்யமான குறிப்புகள்
1. கோமளவள்ளி என்ற பெயரை அவரே மறந்திருப்பார். பிறந்ததும்ஜெ யலலிதாவிக்குச் சூட்டப்பட்ட பெயர் அது. ஆனால் சில காலத்தில்`ஜெயலலிதா’ ஆனார்.ஜெயா, ஜெய், லில்லி எனப் பல பெயர்களில் பள்ளித்தோழிகளால் அழைக்கப்பட்டவர். அவரது அம்மாவுக்கு `அம்மு’. அ.தி.மு.க –வினர் அனைவருக்கும் `அம்மா’!

2. சர்ச் பார்க் மாணவி என்றுதான் பலருக்கும் தெரியும். ஆனால், மாம்பல ம்ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்துவிட்டுத்தா ன்மெட்ரிக் வரை சர்ச் பார்க்கில் படித்தார்.`எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் சர்ச் பார்க்கில் படிக்க வேண்டும்’ என்பதைத் தனது ஆசையாகச் சொல்லியிருந்தார்
3. போயஸ் கார்டன், சிறுதாவூர் பங்களா, ஊட்டி கொடநாடு எஸ்டேட், ஹைதரபாத் திரட்சைத் தோட்டம் ஆகிய நான்கும் ஜெயலலிதா மாறிமாறித் தங்கும் இடங்கள். 
4. சினிமா காலத்தில் இருந்து அவரை `வாயாடி’ என்று அழைத்தவர்எம்.ஜி.ஆர். இது பற்றி ஜெயலலிதாவிடம் ஒரு நிருபர் கேட்ட போது, சிரித்தபடி சொன்னார்...``அவர் கலகல... நான் லொடலொட!”
5. உடம்பை ஸ்லிம்மாகவைத்துக் கொள்வதில் ஆரம்ப காலத்தில் அதிக அக்கறையுடன் இருந்தார். தினமும் வெந்நீரில் எலுமிச்சம்பழச்சாறும்தேனும் கலந்து குடித்தார்.

6. ஜெயலலிதா நடித்த மொத்தப்படங்கள் 115. இதில் எம்.ஜி.ஆருட ன்நடித்தவை 28. இருவரும் இணைந்து நடித்த் முதல் படம் `ஆயிரத்தில்ஒருவன்’
'7. சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா' என்ற ` அரசிளங்குமரி’படப் பாடல் தான் தனக்கு எப்போதும் பிடித்த நல்ல பாட்டு என்பார். அந்தப்பாடலை எழுதிய பட்டுகோட்டை கல்யாணசுந்தரத்தின் மனைவியிடம் 10லட்சம் பணம் கொடுத்து, அவரது எழுத்துக்களை நாட்டுடைமைஆக்கினார்

8. அரசியலில் நான் என்றுமே குதிக்க மாட்டேன்’ என்று பேட்டி கொடுத்தவர்ஜெயலலிதா. நாடு போகிற போக்கைப் பார்த்தால், ஜெயலலிதாகூடமுதலமைச்சர் ஆகிவிடுவார்போல’ என்று அவர் நடிக்க வந்த காலத்தில்பேட்டியளித்தார் முரசொலி மாறன்

9 ஜெயலலிதா சென்னை தி. நகர்
சிவஞானம் தெருவில்குடியிருந்தார். பிறகு, அடையாறு பகுதியில் குடிஇருந்தார். படங்கள் குவிந்து,நடிப்பில் கொடிகட்டிய காலத்தில்தான், போயஸ் கார்டன் வீடு கட்டப்பட்டது அதன் ஒவ்வொரு செங்கல்லையும்பார்த்துக் கட்டியவர், அவரது அம்மா சந்தியா. ``வீட்டுக்குள்ளே என்னமாற்றமும் செய்யலாம், ஆனா,எங்க அம்மா வைத்த வாசலை மட்டும்மாற்றக் கூடாது” என்று சொல்லி இருக்கிறாராம் ஜெயலலிதா

10. எப்போதும் அம்மா செல்லம்தான். அவருக்கு இரண்டு வயது இருக்கும்போதே தந்தை இறந்துபோனதால், அந்த நினைவுகள் இல்லை. போயஸ் வீட்டுக்குள் நுழையும் இடத்தில் சந்தியா, எம்.ஜி.ஆர். ஆகிய இருவரின் படங்கள் மட்டுமே இருக்கும்
11.எம்.ஜி.ஆர். ரசிகர் மன்ற விழாவில் ஆறு அடி உயரமுள்ள வெள்ளிச்செங்கோலை எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா வழங்கினார். ஜெயலலிதாவுக்குமிகவும் பிடித்த புகைப்படம் அதுதான்

12. பெருமாளை விரும்பி வணங்குகிறார். மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் இதில் முதன்மையானது. மயிலைகற்பகாம்பாளையும், கும்பகோணம் ஐயாவாசி பிரத்தியங்கராதேவியையும் சமீப காலமாக வணங்கி வருகிறார்
13. தினமும் காலையில் நிஷாகந்தி எனப்படும் இருவாட்சி மலரைப் பறித்துபூஜைக் கூடையில் தயாராக வைத்திருப்பார்கள் கார்டன்பணியாளர்கள். அதை எடுத்தபடியே பூஜை அறைக்குள் நுழைவார்.

14. யாகம் வளர்ப்பது, ஹோமத்தில் உட்காருவதில் ஜெயலலிதாவுக்கு ஈடுபாடு அதிகம். யாகத்தில் ஆறு மணி நேரம் கூட உட்கார்ந்திருக்கிறார். அவசரமாக மந்திரம் சொன்னாலோ, தவறாகச் சொன்னாலோ, கண்டுபிடித்து நிறுத்தச் சொல்லும் அளவுக்கு வேத ஞானம் உண்டு.
15. சிறுதாவூர் பங்களா இருக்குமிடம் 116 ஏக்கர். அங்குபுறா,கிளி,காடை, கெளதாரி போன்றவற்றை வளர்த்து வந்தார்.இந்திரா,சந்திரா என்ற இரண்டு ஈமுக்களும் வளர்த்தார். இரண்டும்திடீரென இறந்துவிட... ஈமு வளர்ப்பதையே விட்டுவிட்டார்

16. பரதநாட்டியம், ஓரியன்டல் டான்ஸ் இரண்டையும் முறைப்படி கற்றுஅரங்கேற்றம் செய்தவர்.
17. ஜெயலலிதாவின் 100 –வது படத்துக்கான பாராட்டு விழாவில்அப்போதைய முதல்வர் கருணாநிதியால் `நடிப்புக்கு இலக்கணம்வகுத்தவர்’ என்று பாராட்டபட்டவர்
18. பழைய பாடல்களை மணிக்கணக்கில் கேட்டு லயிக்கிறார்
