பல முறை தன் அரசியல் எதிரியான திமுகவை தோற்கடித்த ஜெயலலிதா தனது இறப்பிலும் எதிரியை வென்றுவிட்டார் . ஜெயலலிதாவின் மரணத்திற்கு திமுக தொண்டர்கள் மனம் வருந்தி பேனர் வைத்துள்ளனர். திமுகவினர் மனதையும் வென்ற ஜெயலலிதாவின் மரணம் யாராலும் மறக்க முடியாதது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதோ ஜெயலலிதாவின் மரணத்திற்கு திமுகவினரின் கண்ணீர் அஞ்சலி ....

நீயில்லையே........ 

தைரியமான எதிரியாய் எங்கள்முன் நீ இப்போது இல்லையே...... 

ஆயிரம் தலைவர்கள் எங்கள்முன் நின்றாலும் வீரமங்கையே உனக்கு ஈடாகுமா......... 

எல்லாவற்றிலும் எங்கள் தலைவனை முந்த ஆசைப்பட்டாய் அடிப்பாவி இறப்பில் கூடவாஇவ்வளவு அவசரம்.......

இனி எங்கள் தளபதி போட்டி மேடைக்கு வீரர்களை எங்கு தேடுவார்.....

உன்னை தேர்தல் களத்தில் ஒரு வீரமங்கையாய் எதிர்த்தோமே அன்றி...

தலைவரின் உள்ளத்திலும் தளபதியின் உள்ளத்திலும் நீ நீடுலிவாழவேண்டும் என்ற எண்ணமே அல்லாமல் வேறில்லை....

இனி நாங்கள் எங்களின் சரியான எதிரியை எங்கு போய் தேடுவோம்..... 

நீயில்லாமல் கவலையின் உச்சத்தில்.

--- தி மு கழகம்----