விவசாயிகள், கழிப்பறை சுத்தம் செய்பவர்கள், கட்டட தொழிலாளர்கள் போன்ற உழைப்பாளிகள் எல்லாம் பென்சன் கேட்கிறார்களா ? மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் உடனடியாக வேலைக்கு திரும்ப வேண்டும் என ஒருவர் ஆசிரியர்கள் நாக்கை பிடுங்கி கொள்வது போல் கேட்டு வாட்ஸ் அப்பில் பதிவிட்டிருப்பதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது,
பழையஓய்வூதியதிட்டத்தைஅமல்படுத்தவேண்டும். இடைநிலைஆசிரியர்களுக்கு, மத்தியஅரசுக்குஇணையானஊதியம்வழங்கவேண்டும். சிறப்புகாலமுறைஊதியம்பெற்றுவரும்சத்துணவு, அங்கன்வாடி, வருவாய்கிராமஉதவியாளர்கள், ஊர்புறநூலகர்கள், கல்வித்துறையில்பணியாற்றும்துப்புரவுபணியாளர்கள், தொகுப்பூதியத்தில்பணியாற்றும்சிறப்புஆசிரியர்கள், செவிலியர்கள், பல்நோக்குமருத்துவமனைபணியாளர்கள்ஆகியோருக்குவரையறுக்கப்பட்டகாலமுறைஊதியம்வழங்கவேண்டும். 21 மாதகாலநிலுவைதொகையினைவழங்கவேண்டும்.

3 ஆயிரத்து 500 தொடக்கப்பள்ளிகளைஉயர்நிலைமற்றும்மேல்நிலைப்பள்ளிகளுடன்இணைக்கும்முடிவினையும், 3 ஆயிரத்து 500 சத்துணவுமையங்களைமூடும்முடிவினையும்ரத்துசெய்யவேண்டும்என்பதுஉள்படபல்வேறுகோரிக்கைகளைவலியுறுத்திஜாக்டோ-ஜியோஅமைப்புசார்பில்கடந்த 22-ந்தேதிமுதல்தமிழகம்முழுவதும்காலவரையற்றவேலைநிறுத்தபோராட்டம்தொடங்கியது. தொடர்ந்து 5 ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஆனால் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை சமூக வலை தளங்களில் சிலர் கடுமையாக விமர்சனர் செய்து வருகின்றனர். இந்நிலையில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் போராட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் ஒருவர், வாட்ஸ் அப்பில் ஆசிரியர்களை மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அதில் சுயநலத்துக்காக போராடி வரும் ஆசிரியர்களால் எங்களது குழந்தைகளின் படிப்பு பாழாவதாக தெரிவித்துள்ளார். லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குபவர்களுக்கு எதற்கு பென்சன் என கேள்வி எழுப்பியுள்ள அவர், விவசாயிகள், கட்டடம் கட்டும் தொழிலாளர்கள், கழிவறை சுத்தம் செய்பவர்கள் எல்லாம் பென்சன் வேண்டும் என்றா கேட்கிறார்கள் ?என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சரி இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களே அவர்கள் ஒழுங்காக வேலை செய்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. செமையா சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள் தங்கள் பணத்தை வட்டிக்கு விடுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
