உத்தரபிரதேச மாநிலத்தில் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றுக் கொண்டபின்  கடந்த 16 மாதங்களில் 3000 ற்கும் மேற்பட்ட என்கவுண்டர்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் 78 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 800 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அந்த மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசமாநிலத்தில், ஆதித்யநாத்தலைமையிலானபாஜகஅரசுபொறுப்பேற்றதுமுதல்கடந்த 16 மாதங்களில் 3 ஆயிரத்துக்கும்மேற்பட்டஎன்கவுண்ட்டர்கள்நடத்தப்பட்டு 78 பேர்சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகபுள்ளிவிரங்கள்வெளியாகியுள்ளன.

ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்த உடனேயே ஆபரேசன்கிளீன்என்றபெயரில் இந்தஎன்கவுண்ட்டர் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. முதல் 6 மாதங்களில்மட்டும் 430-க்கும்மேற்பட்டஎன்கவுண்ட்டர்கள்நடந்தப்பட்டன. ஒவ்வொரு 12 மணிநேரத்திற்கும்ஒருஎன்கவுண்ட்டர்விகிதம்அரங்கேற்றப்பட்டது. ஓராண்டுமுடிவில்ஆயிரத்திற்கும்மேற்பட்டஎன்கவுண்ட்டர்கள்நடத்தப்பட்டிருந்தன.

உத்தரப்பிரதேசத்தில்என்கவுண்ட்டர்கள்நடத்தியதும்காவல்துறைஅதிகாரிகளுக்குப்பதவிஉயர்வுவழங்கப்படும்என்பதால், பதவிஉயர்வுக்காகவும், காவல்துறையேகூலிப்படைஅமர்த்திபடுகொலைகளைநடத்தியதாக கூறப்படுகிறது.

.இந்நிலையில் ஆதித்யநாத்அரசேஎன்கவுண்ட்டர்படுகொலைகளின்பட்டியலைதற்போதுவெளியிட்டுள்ளது.அதில் 2017 மார்ச்சில்ஆதித்யநாத்முதலமைச்சராக பதவி ஏற்றதில் இருந்து 2018 ஜூலைவரையிலானகாலகட்டத்தில், மொத்தம் 3036 என்கவுண்ட்டர்கள்நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், 78 குற்றவாளிகள்சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்; 838 குற்றவாளிகள்காயமடைந்துள்ளனர்; 7 ஆயிரத்து 43 கிரிமினல்கள்கைதுசெய்யப்பட்டுள்ளனர்என்றுபுள்ளிவிபரங்கள்அளிக்கப்பட்டுள்ளன.

சராசரியாகஒருநாளைக்கு 6 என்கவுண்ட்டர்கள்நடத்தப்பட்டுஇருப்பதாகவும், ஒவ்வொருமாதமும்சராசரியாக 4 பேர்சுட்டுக்கொல்லப்பட்டுஇருப்பதாகவும்அந்த புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.