Asianet News TamilAsianet News Tamil

அதிமுகவின் மூத்த சகோதரர் மதுசூதனன்.. விரைவில் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.. சசிகலா உருக்கம்..!

மதுசூதனன் தனது 14 வயதிலேயே வடசென்னையில் எம்ஜிஆர் மன்றம் தொடங்கியவர். மதுசூதனன் பூரண உடல்நலம் பெற இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். 

I pray to the Lord that Madhusudhanan will get well soon... sasikala speech
Author
Chennai, First Published Jul 20, 2021, 2:57 PM IST

அதிமுக மீது மிகுந்த பற்று கொண்டவர் மதுசூதனன், அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று என சசிகலா கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த மதுசூதனனுக்கு கடந்த 18ம் தேதி திடீரென மூச்சத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. 

I pray to the Lord that Madhusudhanan will get well soon... sasikala speech

இந்நிலையில், சசிகலா மதுசூதனை உடல்நலம் குறித்து விசாரிக்க காரில் அதிமுக கொடியுடன் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்தார். பின்னர், மதுசூதனனின் குடும்பத்தாரிடம் உடல்நலம் குறித்து விசாரித்த நிலையில், மருத்துவர்களிடமும்  அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

I pray to the Lord that Madhusudhanan will get well soon... sasikala speech

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சசிகலா;-அதிமுக எனும் எங்கள் குடும்பத்தில் மதுசூதனன் மூத்த சகோதரரின் உடல்நலம் சரியில்லாததை அறிந்து மருத்துவமனையில் அவரை பார்த்தேன். மதுசூதனன் தனது 14 வயதிலேயே வடசென்னையில் எம்ஜிஆர் மன்றம் தொடங்கியவர். மதுசூதனன் பூரண உடல்நலம் பெற இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். எம்ஜிஆர் மீது மிகுந்த பற்று கொண்டவர். எம்ஜிஆர் காலத்தில் மதுசூதனன் எம்எல்சியாக இருந்தவர். ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராகப் பணியாற்றியவர்.  மதுசூதனன் குடும்பத்தாரை நேரில் சந்தித்து அவரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன் என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios