மக்களின் உணர்வைப் புரிந்துக் கொள்வது மற்றும் அந்த உணர்வை பின்பற்றியே நாம் செயல்பட வேண்டும் என்ற இரண்டு பாடங்களை பிரதமர் மோடியிடம் இருந்து கற்றுக் கொண்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் மாநில தேர்தல்களில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது. பாஜக ஆட்சி செய்த அந்த மூன்று மாநிலங்களில் அந்தக் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கும் பிறகு டெல்லியில் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்த 5 மாநிலதேர்தல்முடிவுகள்மூலம்மக்கள்அளித்துள்ளதீர்ப்புவிவசாயிகள், சிறுவணிகர்கள்மற்றும்காங்கிரஸ்தொண்டர்ளுக்கானவெற்றிஎன்றும் இந்தவெற்றிகாங்கிரசுக்குஅளிக்கப்பட்டமிகப்பெரியபொறுப்பாகும். இதைநாங்கள்நிறைவேற்றுவோம்எனராகுல்காந்திகுறிப்பிட்டார்.
சமாஜ்வாதிகட்சி, பகுஜன்சமாஜ்கட்சிமற்றும்காங்கிரஸ்கட்சியின்சித்தாந்தம்ஒன்றானவை, பா.ஜ.க.வின்சித்தாந்தத்தில்இருந்துமாறுபட்டவை என்றார் அவர்..
காங்கிரஸ்வெற்றிபெற்றுள்ளமாநிலங்களுக்கானபுதியமுதல்மந்திரிகளைதேர்வுசெய்வதுபெரியகாரியமல்ல. அதுசுமுகமாகமுடிந்துவிடும். எங்களைவெற்றிபெறவைத்தமாநிலமக்களுக்கானதொலைநோக்குதிட்டத்தைவகுத்து, அவர்கள்பெருமைப்படும்வகையில்அவற்றைகாங்கிரஸ்அரசுநிறைவேற்றும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
.
தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடி தமக்கு இரண்டு பாடங்களைக் கற்றுக் கொடுத்திருப்பதாக கூறினார். தமது வாழ்க்கையின் மிகச்சிறந்த தருணம் இது என்றும் ராகுல் காந்தி மகிழ்ச்சி தெரிவித்தார்.
தேர்தல்கள் மூலம் தாம் நிறைய பாடங்களைக் கற்றுக் கொண்டிருப்பதாக கூறிய ராகுல் காந்தி, மக்களின் உணர்வைப் புரிந்துக் கொள்வதுதான் அதில் முதன்மையான பாடம் என்றார்.

இரண்டாவது அந்த உணர்வை பின்பற்றியே அடுத்து நாம் செயல்பட வேண்டும். இந்த இரண்டு பாடங்களையும் தாம் பிரதமர் மோடியிடமிருந்தே கற்றுக் கொண்டதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
மோடி மக்களின் இதயத்துடிப்பை கேட்கவில்லை என்றும் நாட்டை வழிநடத்த அவருக்கு வழங்கப்பட்ட மகத்தான வாய்ப்பை தவறாகப் பயன்படுத்திக் கொண்டார் என்றும் ராகுல்காந்தி விமர்சித்தார்.
