அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் என்னை மைக்குமார் என்று கூறிவருகிறார். ஆனால் நான் மைக் குமார் அல்ல…மைக்  டைசன் என பதிலடி அமைச்சர் ஜெயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.

அதிமுக கட்சியாகட்டும், ஆட்சியாகட்டும் எந்தப் பிரச்சனை எனறாலும் முதல் ஆளாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளிப்பது அமைச்சர் ஜெயகுமார்தான். மேலும் செய்தியாளர்கள் எளிதில் சந்திக்ககூடிய ஒரே நபர் அமைச்சர் ஜெயகுமார்தான்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆனால் அவரை அமமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், மைக் குமார் என கிண்டல் பண்ணினார். இந்நிலையில் சென்னையில் இன்று பேட்டி அளித்த ஜெயகுமார், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றதேர்தலுக்குஅதிமுகதயாராகஉள்ளது என தெரிவித்தார்.

2021-ல்தான்தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல்வரும் என்றும்,  2019-ல்சட்டமன்றதேர்தல்வருவதைதிமுகதொண்டர்களேவிரும்பமாட்டார்கள் என்றும் கூறினார்.

இதைத் தொடர்ந்து அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் உங்களை மைக் குமார் என்று கிண்டல் செய்கிறாரே என கேட்டதற்கு, மைக்முன்னாடிபேசினால்தவறா? என கேட்டார். ஆனால் நான்மைக்குமார்அல்ல…மைக்டைசன்…. நாக்கவுட்தான்… எனக்குபாக்ஸிங்தெரியும்என தினகரனை செமையாக கலாய்த்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், திமுகதலைவர்மு..ஸ்டாலின்முதலமைச்சர் கனவால் தூக்கமின்றிதவிக்கிறார் என தெரிவித்தார்..