h.raja supported to governer banvaarilaal brohit

மத்திய அரசின் திட்டங்களில் ஊழல் அதிகரித்துவிட்ட நிலையில் ஆளுநரின் ஆய்வு அதிகரிக்கப்பட வேண்டும் என்று எச். ராஜா டுவிட் செய்ததும் போதும் வழக்கம்போல் நெட்டிசன்கள் கலாய்க்க படையெடுத்து விட்டனர். 

கோவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்றும் இன்றும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அதிகாரிகளிடம் அரசு நிலைமையையும் கேட்டறிந்தார். 

இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். ஆளுநரின் நடவடிக்கைக்கு பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ஆதரவு தெரிவித்தார். 

இதேபோல் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஆளுநருக்கு ஆதரவு தெரிவித்து டுவிட் போட்டார். 

மேதகு ஆளுநர் அவர்கள் கோவையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது இயல்பானது, வரவேற்கத்தக்கது. இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கின்றனர். மத்திய அரசு திட்டங்களில் நடக்கும் ஊழல்கள் அதிகரித்துள்ளநிலையில் ஆளுநர் அவர்களின் ஆய்வு அதிகரிக்கப்பட வேண்டும்

— H Raja (@HRajaBJP) November 15, 2017

அதில், மத்திய அரசின் திட்டங்களில் ஊழல் அதிகரித்துவிட்ட நிலையில் ஆளுநரின் ஆய்வு அதிகரிக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார். 

உடனே வழக்கம்போல் நெட்டிசன் ஹெச்.ராஜாவை கடுப்பேற்றும் வகையில் பதில் டுவிட் போட ஆரம்பித்து விட்டனர். 

அதாவது அப்படியே பிரதமர் வேலையையும் ஜனாதிபதி ஆலோசனை செய்து கண்காணிக்க வேண்டும் என ஒருவர் தெரிவித்துள்ளார். 

அப்படியே பிரதமர் வேலையும், ஜனாதிபதி ஆலோசனை செய்து கண்காணிக்க வேண்டும் 🤗🤗 pic.twitter.com/RwtI3TZRzo

— BalaKumaresan-பாகு🐅 (@Balakumaresa) November 15, 2017

மற்றொருவர், மேதகு குடியரசு தலைவர் CBI, IT, NSA, RBI மற்றும் மத்திய அரசின் துறைகளை ஆய்வு செய்ய மோதியை அனுமதிக்க சொல்லுங்கள் ராசாஆஆஆஆ...என்று குறிப்பிட்டுள்ளார். 

மேதகு குடியரசு தலைவர் CBI, IT, NSA, RBI மற்றும் மத்திய அரசின் துறைகளை ஆய்வு செய்ய மோதியை அனுமதிக்க சொல்லுங்கள் ராசாஆஆஆஆ......

— Pa.Elantamil Arvalan (@arvalan) November 15, 2017

மேலும் ஒருவர், பலவீனமான 'டெட்பாடி' அரசு நடப்பதால் மாநில உரிமைகளில் தலையிட்டு ஏறி மிதிக்கிறீங்க! அடுத்து ஆட்சிக்கு வரும் திமுகவிடம் உங்க பருப்பு வேகாது ராசா! "மத்தியில் கூட்டாச்சி, மாநிலத்தில் சுயாட்சி" இதுவே திமுகவின் தாரக மந்திரம்! என தெரிவித்துள்ளார். 

பலவீனமான 'டெட்பாடி' அரசு நடப்பதால் மாநில உரிமைகளில் தலையிட்டு ஏறி மிதிக்கிறீங்க! அடுத்து ஆட்சிக்கு வரும் திமுகவிடம் உங்க பருப்பு வேகாது ராசா! "மத்தியில் கூட்டாச்சி, மாநிலத்தில் சுயாட்சி" இதுவே திமுகவின் தாரக மந்திரம்!

— Veera (@veera_ganesan) November 15, 2017