முதல்வரின் கருத்துகளை நிதானமாக கேட்டுக் கொண்ட ஆளுநர் இந்த சந்திப்பின் இறுதியில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரும் மசோதாவை இந்திய குடியரசுத் தலைவர் அவர்களுக்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்தார். 

நீட் விலக்கு உட்பட நிலுவையில் உள்ள மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் ஆர்.என் உறுதி அளித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. நீட் தேர்வு விலக்கு கோரும் சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு விரைந்து அனுப்ப வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆளுநரை சந்தித்துள்ள நிலையில் இந்த தகவலை அரசு வெளியிட்டுள்ளது.

நீட் விலக்கு கோரி சட்டமன்ற தீர்மானம்:

நீட் தேர்வு விலக்கு தொடர்பான தமிழ்நாடு இளங்கலை மருத்துவ படிப்புக்கான சேர்க்கை சட்டம் 2021 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 13-9-2021 அன்று அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், 142 நாட்களுக்கு பிறகு ஆளுநரால் அது திருப்பி அனுப்பப்பட்டது. அதன் பின்னர் தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்: கர்நாடக பாஜக- மத்திய பாஜக அரசுகள் தமிழ் நாட்டுக்கு துரோகம்.. எரிமலையாய் வெடிக்கும் வேல் முருகன்..

ஆளுநரை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்: 

2021-22 ஆம் ஆண்டு கல்வி ஆண்டு முடிவுக்கு வந்து, 2002-23 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைமுறை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு விரைந்து அனுப்பிவிட வேண்டும் என்று மாண்புமிகு தமிழக ஆளுநரை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் இன்று அளுநர் மாளிகைக்கு சென்று நேரில் சந்தித்து வலியுறுத்தினார். மேலும் இதே போன்று பல மாதங்களாக நிலுவையில் இருக்கும் சட்ட முன் வடிவுகள் மற்றும் கோப்புகள் மீதும் உடனடி நடவடிக்கை எடுப்பதன் மூலம் தமிழக சட்டமன்றத்தின் மாண்பை காப்பதுடன் தமிழக மக்களின் உணர்வுகளை மதிப்பதாகவும் அமைந்துவிடும் என தமிழக அரசிடம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இன்று சுட்டிக்காட்டி வலியுறுத்தினார்.

இதையும் படியுங்கள்: நான் ஒதுங்கவும் இல்ல, பதுங்கவும் இல்ல.. இனி என் ஆட்டத்தை பாருங்க.. தில்லு காட்டும் டிடிவி தனகரன்.

குடியரசு தலைவருக்கு அனுப்புவதாக ஆளுநர் உறுதி: 

முதல்வரின் கருத்துகளை நிதானமாக கேட்டுக் கொண்ட ஆளுநர் இந்த சந்திப்பின் இறுதியில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரும் மசோதாவை இந்திய குடியரசுத் தலைவர் அவர்களுக்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்தார். ஆளுநர் மாளிகையில் நடந்த இந்த சந்திப்பின்போது நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.