பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாட சீக்கிரம் போனஸ் கொடுங்க...!! அறிவிப்புக்காக ஏங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்...!!
சத்துணவு பணியாளர்கள் உள்ளிட்டோர் குடும்பங்களில் தைத்திருநாளாம் தமிழர் திருநாளை சிறப்பாக கொண்டாடிடும் வகையில் பொங்கல் போனஸ் உடனே வழங்கிட ஆவனசெய்ய வேண்டும் .
தமிழர் திருநாளாம் பெங்கல் பண்டிகையைக் கொண்டாடிட ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள அச்சங்கத்தில் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன், தமிழ்நாடு அரசில் பணிபுரியும் ஆசிரியர் -அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ஜனவரி தொடக்கத்திலே அறிவிப்பது வழக்கம்.
இந்தாண்டு பொங்கல் பண்டிகை நெருங்குவதால் அறிவிப்பு எப்போதுவரும் என்ற எதிர்பார்ப்பில் ஆசிரியர்கள் காத்திருக்கிறோம் , தமிழர்த்திருநாளினை மகிழ்ச்சியோடு கொண்டாடிடும் வகையில் பொங்கல் போனஸ் விரைந்து வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் ஆசிரியர்- அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் , சத்துணவு பணியாளர்கள் உள்ளிட்டோர் குடும்பங்களில் தைத்திருநாளாம் தமிழர் திருநாளை சிறப்பாக கொண்டாடிடும் வகையில் பொங்கல் போனஸ் உடனே வழங்கிட ஆவனசெய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிளறோம் என தெரிவித்துள்ளனர்.