காந்தி கருத்துகள் தற்போதைய சூழலுக்கு தேவை; கமல் டுவிட்!
மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி, அவரின் கருத்துகளை நினைவு கூறும் வண்ணம் நடிகர் கமல் ஹாசன் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இன்று காந்தி ஜெயந்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 149-வது காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அவரின் கருத்துக்களை எடுத்துரைக்கும் வண்ணம் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
நடிகர் கமல் ஹாசன், தனது அரசியல் பிரவேசம், சமூகம் குறித்தும் நேற்று
சென்னை அடையாறில் திறக்கப்பட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டபம் வரை தனது கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில், இன்று மகாத்மா காந்தியின் பிறந்த நாள் விழா, இன்று கொண்டாடும் நிலையில், காந்தியின் கருத்துக்களை நினைவு கூறும் வண்ணம் டுவிட்டர் பதிவு ஒன்றை கமல் வெளியிட்டுள்ளார்.
அதில், முதலில் நம்மை ஒதுக்குவார்கள், பின்னர் நம்மை பார்த்து நகைப்பார்கள். இதையடுத்து நம்மிடம் சண்டையிடுவார்கள். அதன் பின்னரே நாம் வெற்றியடைவோம் என்று பதிவிட்டுள்ளார்.
காந்தியின் இந்த வார்த்தைகள் அளிக்கும் நம்பிக்கை தற்போதைய சூழலுக்கு தேவைப்படுவதாகவும் கமல் டுவிட்டரில் தெரிவித்துள்ளர்.