Asianet News TamilAsianet News Tamil

கோட்டு போடுவது கழட்டுவது.. டீ குடிப்பது நடப்பது.. முதல்வர் ஸ்டாலினை குண்டக்க மண்டக்க கலாய்த்த ஜெயக்குமார்.!

முதல்வர் கோட்டு போடுவது ரிப்பீட்டு, டீ குடிப்பது ரிப்பீட்டு, நடந்துபோவது ரிப்பீட்டு, கோட்டு கழட்டுவது ரிப்பீட்டு என முதல்வர் இருக்கிறார்.

former minister jayakumar kinda tamilnadu chief minister mk stalin in rain and flood issue
Author
Chennai, First Published Nov 29, 2021, 10:05 PM IST

மழை, வெள்ளத்தில் ரிப்பீட்டு பணிகளையே முதல்வர் தொடர்ந்து செய்து வருகிறார். மக்களுக்கான ஆக்கப்பூர்வமான திட்டங்கள் எதையும் அவர் செயல்படுத்தவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்துள்ளார்.former minister jayakumar kinda tamilnadu chief minister mk stalin in rain and flood issue

சென்னை ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய தொகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலுக்கு அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் வழங்கப்படும் நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். பின்னர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அதிமுக தலைமையின் ஆலோசனைப்படி தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெறும் இடங்களில் அதிமுகவினர் எழுச்சியோடு விருப்ப மனு அளித்து வருகிறார்கள். தொண்டர்களின் இந்த எழுச்சியைப் பார்க்கிறபோது அதிமுக மற்றும் தோழமை கட்சிகளின் வெற்றி தெரிகிறது. இத்தேர்தலில் கிடைக்கும் வெற்றிக்குப் பிறகு  சென்னை அதிமுகவின் கோட்டையாக மாறும்.

சென்னையில் உள்ள 16 கால்வாய்களில் மாம்பலம் கால்வாய், ஓட்டேரி கால்வாய் தூர்வாரப்படவில்லை. இதனால், சென்னை மக்கள் வெள்ள நீரில் படகுகள் மூலம் சென்று வந்து அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை முழுவதுமே மழை நீர் கால்வாய்கள் முழுவதுமாக தூர்வாரப்படவில்லை. அதனால்தான்  சென்னையில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. மழை வெள்ளத்தை அப்புறப்படுத்த எந்த ஒரு இடத்திலும் ராட்சத இயந்திரங்கள் ஏதும் பயன்படுத்தப்படவில்லை.former minister jayakumar kinda tamilnadu chief minister mk stalin in rain and flood issue

மழை காலத்தில் திமுக விழிப்புணர்வு இல்லாமல் செயல்பட்டு வருகிறது. பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் எப்படிச் செய்வது, மறுவாழ்வு மையத்தை எப்படி நடத்துவது என திமுக அரசுக்கு தெரியவில்லை. அது தொடர்பாக திமுகவினர் எங்களிடம் கேட்டு மக்களுக்கு அந்தப் பணிகளை செய்யட்டும். முதல்வர் கோட்டு போடுவது ரிப்பீட்டு, டீ குடிப்பது ரிப்பீட்டு, நடந்துபோவது ரிப்பீட்டு, கோட்டு கழட்டுவது ரிப்பீட்டு என முதல்வர் இருக்கிறார். இந்த ரிப்பீட்டு பணிகளையே முதல்வர் தொடர்ந்து செய்து வருகிறார். மக்களுக்கான ஆக்கப்பூர்வமான திட்டங்கள் எதையும் அவர் செயல்படுத்தவில்லை” என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios