Asianet News TamilAsianet News Tamil

ஸ்டாலினுக்காக, இந்திராகாந்தியை அசிங்கப்படுத்திய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்..? என்னதான் சொல்ல வர்றீக அமித்ஷா அண்ணாச்சி..!

தென்மாநிலங்களை பி.ஜே.பி. புறக்கணிக்கவில்லை. கேரளாவில் தேர்தலில் எம்.பி.க்கள் தேர்வாகவிட்டாலும் கூட நான்கு பேருக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கினோம். ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கினோம்

evks elangovan
Author
Tamil Nadu, First Published Apr 4, 2019, 5:53 PM IST

* தி.மு.க.வின் தலைவர் மு.க. ஸ்டாலினை வாரிசு அரசியல்வாதி என்கிறீர்கள். அவர் பள்ளிக்கூட நாட்களில் இருந்தே கட்சிக்காக உழைத்தவர், அவசர நிலையின் போது சிறையில் கொடுமைகளை அனுபவித்தவர்! : ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். (வர்ரே வாவ்! கூட்டணி தர்மத்தைக் காப்பாத்துறேன் பேர்வழின்னு, கூட்டணியின் தலைவரை புகழ்ந்து பேசுற நீங்க, சந்தடி சாக்குல எமெர்ஜன்ஸி கொடுமைகளை கதையை பேசி, உங்க கட்சியின் ராஜமாதா இந்திராகாந்தியை அசிங்கப்படுத்திட்டீங்ளே மிஸ்டர். இலா!)

* தி.மு.க.வின் கரத்தை வலுப்படுத்த வேண்டும், இது காலத்தின் கட்டாயம். தமிழகத்தை காப்பாற்ற வேண்டும். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தி.மு.க.விற்கு ஆதரவு அளித்துள்ளோம். ராமதாஸ் வன்னிய சொத்துக்களை அபகரித்ததற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது: வேல்முருகன். 
(செவ்வாழ, நீ சப்போர்ட் பண்றதெல்லாம் சரி. ஆனா அதுக்காக நாங்க ஜெயிச்சு ஆட்சிக்கு வந்தால்...டோல்கேட் ஆளுங்களை கும்மி எடுக்குறது, ஃப்ரீ பாஸ் கேட்டு டார்ச்சர் பண்றதுன்னு எதுவும் பண்ணாம, சமர்த்தா சைலண்டாவே இருக்கணும்.)

* இந்த தேசத்தில் மதவாத சக்திகளை வீழ்த்துவோம். தி.மு.க.வின் கூட்டணியானது சொன்னதையும் செய்யும், சொல்லாததையும் செய்யும். தமிழகத்தில் ஒருவிரல் புரட்சி வெடிக்கட்டும்: லீமாரோஸ் மார்ட்டின். (க்கும், முதல்ல உங்க புருஷன் இன்னமும் கள்ளத்தனமா நடத்திட்டு இருக்கிற ‘ஒரு நம்பர் லாட்டரி’யை முதல்ல ஒழிச்சாலே பாதி புரட்சி நடந்த மாதிரிதான். போங்க மேடம் போயி தண்ணியக் குடிங்க)

* ஏழை எளிய மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதற்காக, அம்மக்களோடு சாமான்யர்களாகவே பழகுபவர்கள்தான் நம் முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ். காமராஜர் ஆட்சிக்குப் பின் பொற்கால ஆட்சி என்றால் அது இதுதான்: ஜி.கே.வாசன். 
(ஜங்ங்ங்ங்ங்ங்ங் சக்! ஜங்ங்ங்ங்ங்ங் சக்! ஜங்ங்ங்ங்ங்ங் சக்! சின்னய்யா கொஞ்சம் கம்மி பண்ணுங்க. காது வலிக்குது!)

* தென்மாநிலங்களை பி.ஜே.பி. புறக்கணிக்கவில்லை. கேரளாவில் தேர்தலில் எம்.பி.க்கள் தேர்வாகவிட்டாலும் கூட நான்கு பேருக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கினோம். ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கினோம்: அமித்ஷா. (ஆக, இன்றைக்கு நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னா....தூத்துக்குடியில எங்கக்கா தமிழிசை செயிக்கலேன்னாலும் பரவால்ல, அவுகளுக்கு ராசிய சபாவுல ஒரு சீட்டு உறுதின்னு சொல்லுறீகளா அமித்ஷா அண்ணாச்சி!)

Follow Us:
Download App:
  • android
  • ios