தற்போதுள்ள ஆளும் அதிமுகவின் ஆட்டம்மெல்லாம் அடங்கி விடும் என்றும் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்தான் வெற்றி பெறும் என்றும்  வேலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில்  அக்கட்சியின்  துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

டி.டி.வி.தினகரன் அதிமுகவில் இருந்து பிரிந்த பிறகு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். மதுரை மாவட்டம் மேலூரில் தொடங்கி இந்த புதிய கட்சியின் கூட்டங்களை தமிழகம் முழுவதும் தினகரன் நடத்தி வருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தினகரன் பங்கேற்கும் கூட்டங்களுக்கு வரும் கட்டுக்கடங்காத கூட்டத்தைப் பார்த்து ஆளும் அதிமுகவினர் மிரண்டு போயுள்ளனர். மினகதன் நடத்தும் கூட்டங்களில் எல்லாம் நாங்கள்தான் உண்மையான அதிமுக என்றும் இபிஎஸ் வசம் உள்ள அக்கட்சியை விரைவில் மீட்போம் என தொடர்ந்து கூறி வருகிறார்.

இந்நிலையில் வேலூரில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் சார்பில்நலத்திட்டஉதவிகள்வழங்கும்விழாநடந்தது. மாவட்டசெயலாளர்கள்பார்த்திபன், பாலசுப்ரமணியன்தலைமைவகித்தனர்.

அந்தக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய துணைபொதுச்செயலாளர்தினகரன் 18 எம்.எல்,.,க்கள்தகுதிநீக்கம்செய்யப்பட்டவழக்கில்நல்லதீர்ப்புகிடைத்ததும், இந்தஆட்சியில், ஆட்டம்போட்டவர்கள்அடங்கிவிடுவார்கள் என தெரிவித்தார்.

ஆர்.கே., நகர்இடைத்தேர்தலில், ஆளும்கட்சியின், பணபலத்தைமீறி, என்னைமக்கள்வெற்றிபெறவைத்தனர். அதுபோன்றே, திருவாரூர், திருப்பரங்குன்றம்ஆகிய தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலிலும், அம்மா மக்கள் முன்னேற்றக கழகம் வெற்றிபெறும்என கூறினார்.

கருணாநிதிஉள்ளவரைமட்டுமே, திருவாரூர்அவர்தொகுதி. நானும், அந்தமாவட்டத்தைசேர்ந்தவன்என்பதைமக்கள்மறக்ந்து விட மாட்டார்கள் என்வும் தினகரன் தெரிவித்தார்.

தூத்துக்குடிஸ்டெர்லைட்ஆலையை எப்படியாவது திறக்க வேண்டும் என முதலமைச்சர் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். ஆனால் மக்கள் எதிர்ப்பால் தற்போது ஆலையை முடியுள்ளார். தற்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக, நீதிமன்றதீர்ப்புவந்துள்ளதால், என்னசெய்வதென்றுதெரியாமல்முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமிதவித்து வருகிறார் என்றும் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.