Asianet News TamilAsianet News Tamil

அதிமுக அரசை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள்…எடப்பாடி பழனிசாமி ஆவேசம்….

edappadi palanisamy speech in perambalur
edappadi palanisamy speech in perambalur
Author
First Published Aug 5, 2017, 8:54 PM IST


அதிமுக அரசை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள்…எடப்பாடி பழனிசாமி ஆவேசம்….

ஜெயலலிதா  ஆத்மா இருக்கும் வரை  இந்த அரசை யாராலும் அசைக்க முடியாது என்றும், அதிமுக அரசை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள்  என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

பெரம்பலூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஆர் அரசியலுக்கு வருவதற்கு முன்பே, மக்கள் சேவையை தொடங்கியவர் என கூறினார்.

எம்ஜிஆரின் சாதனைகளை புதிய தலைமுறையினரும் தெரிந்து கொள்ளும் வகையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்று வருவதாக கூறினார்.

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தமிழகத்திற்கு கிடைத்த வரங்கள் என்றும், எதிர்கட்சிகள் பாராட்டும் வகையில் செயல்பட்டவர் ஜெயலலிதா என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அதிமுக தொண்டர்கள் தியாகத்துடனும், விசுவாசத்துடனும் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஜெயலலிதா  ஆத்மா இருக்கும் வரை  இந்த அரசை யாராலும் அசைக்க முடியாது என்றும், அதிமுக அரசை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள்  என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios