Asianet News TamilAsianet News Tamil

”மக்கள் நலத்திட்டங்களுக்காகவே ஆட்சி நடத்துகிறோம்” - முதலமைச்சர் உறுதி...

Edappadi Palanisamy Angry against to opposition parties
Edappadi Palanisamy Angry against to opposition parties
Author
First Published Oct 4, 2017, 5:40 PM IST


மக்கள் நலத்திட்டங்களுக்காகவே ஆட்சி நடத்துவதாகவும் எதிர்கட்சிகள் வெண்டுமென்றே பொய் கூறி வருகின்றனர் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. 

அதன்படி இன்று கரூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது, தமிழக அரசின் திட்டங்களையும், எம்.ஜி.ஆரின் புகழையும் பட்டியலிட்டு பேசினார்.

அதாவது அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு குறுக்கே நிற்பவர்களுக்கு மக்கள் பாடம் கற்பிப்பார்கள் எனவும், தமிழகத்தில் தலை தூக்கிய அனைத்து பிரச்சனைகளுக்கும் எம்.ஜி.ஆர் தீர்வு கண்டார் எனவும் தெரிவித்தார். 

மேலும்,  மக்கள் நலத்திட்டங்களுக்காகவே ஆட்சி நடத்துவதாகவும் எதிர்கட்சிகள் வெண்டுமென்றே பொய் கூறி வருகின்றனர் எனவும் குறிப்பிட்டார். 

Follow Us:
Download App:
  • android
  • ios