Asianet News TamilAsianet News Tamil

கனமழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமா போச்சு! இழப்பீட்டை அறிவியுங்கள்! டெல்டா விவசாயிகளுக்கு ஆதரவாக TTV.!

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த கனமழை காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான நெற்பயிர்கள் வயல்களில் சாய்ந்தன. 

Due to heavy rain, paddy crops are submerged and destroyed.. Immediately announce the compensation.. TTV Dhinakaran
Author
First Published Feb 3, 2023, 11:35 AM IST

மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கான உரிய இழப்பீட்டை தமிழ்நாடு அரசு வழங்கிட வேண்டும் என டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார். 

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த கனமழை காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான நெற்பயிர்கள் வயல்களில் சாய்ந்தன. சில இடங்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால், விளைந்த நெல்லை அறுவடை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் கதறி வருகின்றனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை தமிழ்நாடு அரசு உடனே வழங்கிட வேண்டும் என டிடிவி.தினகரன் கோரிக்கை வைத்துள்ளார். 

Due to heavy rain, paddy crops are submerged and destroyed.. Immediately announce the compensation.. TTV Dhinakaran

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- டெல்டா மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாராகி வரும் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி வீணாகியுள்ளன. ஏற்கனவே, வடகிழக்கு பருவமழையினால் சம்பா சாகுபடி ஒரு மாத காலம் தாமதமான நிலையில் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட நீரும் நிறுத்தப்பட்டது.

Due to heavy rain, paddy crops are submerged and destroyed.. Immediately announce the compensation.. TTV Dhinakaran

எனவே, பயிரிடப்பட்ட சம்பா நெற்பயிர்கள் போதிய நீர் இல்லாததால் அறுவடை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், போதிய கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் தேக்கிவைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து வீணாகியுள்ளது. ஆகவே, பாதிக்கப்பட்ட இடங்களில் முறையான ஆய்வை உடனடியாக மேற்கொண்டு விவசாயிகளுக்கான உரிய இழப்பீட்டை தமிழ்நாடு அரசு வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios