சாதிய வன்மத்தை காட்டும் திமுகவை தடை செய்ய வேண்டும்...!புதிய தமிழகம் ஷியாம் கிருஷ்ணசாமி ஆவேசம்.!!
சாதிய மனநிலையில் இருக்கும் திமுகவை தடை செய்ய வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி செயலாளர் ஷ்யாம் கிருஷ்ணசாமி ஆவேசம் காட்டியுள்ளார்.
சாதிய மனநிலையில் இருக்கும் திமுகவை தடை செய்ய வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி செயலாளர் ஷ்யாம் கிருஷ்ணசாமி ஆவேசம் காட்டியுள்ளார்.
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு, என்ற திருக்குறளை திமுக எம்எல்ஏ பழனிவேல் தியாகராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.இதற்கு பதிலளித்த புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி செயலாளர் ஷ்யாம் கிருஷ்ணசாமி ஆவேசமாக பல்வேறு கருத்துக்களை ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.
எங்கள் மக்களின் வாழ்விடங்களே திராவிடத்தின் தொட்டில்களாக விளங்கின என்பதை மறந்து விட்டீர்களா?
பள்ளர், பறையர் கட்சி என்ற முத்திரையோடு வளர்ந்த இயக்கம், ஆனால் அதிகாரமோ உழைக்காத நில பிரபு பிடிஆர்களிடம். ஆயிரகணக்கான ஏக்கர் நிலங்கள் பிடிஆர் வகையார்களிடம் வந்தது எப்படி?
பாண்டே, மாலன், சுமந்த் ராமன்களை எல்லாம் இவர்கள் வசதியா? பிராமணர் முத்திரை குத்திவிடுவார்களாம்…ஆனா இவனுங்க எல்லாம் மனதில் சாதியே இல்லாத நடுநிலை யோக்கியன்களாம், சாதி கேட்ககூடாதாம்.பாஜக தலைவராக முருகன் பேசினாலும், அவரது சாதியை தாண்டி இவனுங்களால பார்க்க முடியல.இவர் சாதி இது, இந்த சாதி காரன் இந்த அரசியலை தாண்டி பேசக்கூடாது என்று இவர்கள் முடிவு செய்வார்களாம்…என்ன கேவலமான புத்தி? பள்ளர்கள் சாதி பார்த்து மதிக்கிறதா மிதிக்கிறதா என்று முடிவு செய்பவர்கள் அல்ல. அப்படி பார்த்தால் இதே மனநிலையுடன் பேசி வரும் தயாநிதி மாறன், ஆர்எஸ் பாரதி ஆகியோரின் திமுகவையும் தடை செய்ய வேண்டும்.