MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • காவிரி விவகாரத்தில் முதல்வர் விஜய் மௌனம் ஏன்? – தமிழக அரசுக்கு வினோஜ் பி. செல்வம் சரமாரி கேள்வி!

காவிரி விவகாரத்தில் முதல்வர் விஜய் மௌனம் ஏன்? – தமிழக அரசுக்கு வினோஜ் பி. செல்வம் சரமாரி கேள்வி!

காவிரி நதி நீர் பகிர்வு விவகாரத்தில் முதல்வர் விஜய்யின் நடவடிக்கைகள் குறித்து தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. மாநில துணைத் தலைவர் வினோஜ் பி. செல்வம்,  அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Aug 03 2026, 01:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
கொதித்தெழுந்த தமிழக பாஜக.!
Image Credit : Asianet News

கொதித்தெழுந்த தமிழக பாஜக.!

தமிழகத்தின் நீர்வள உரிமையுடன் நேரடியாக தொடர்புடைய காவிரி நதி நீர் பகிர்வு விவகாரம் மீண்டும் அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ள தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் வினோஜ் பி. செல்வம், முதல்வர் விஜய் உடனடியாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அவரது இந்த கருத்துகள் மாநில அரசியலில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளன.

இந்த நிலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், காவிரி நீர் பிரச்சினை என்பது அரசியல் விவகாரம் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் விவசாயம், குடிநீர் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய மிக முக்கியமான பிரச்சினை என்று  குறிப்பிட்டுள்ளார். இந்த நேரத்தில் தமிழக அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாக வினோஜ் பி. செல்வம், தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் காவிரி நீர் திறப்பு தொடர்பாக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஆலோசனை நடத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் தமிழ்நாட்டில் இதுபோன்ற அனைத்து கட்சிக் கூட்டமோ அல்லது ஒருங்கிணைந்த அரசியல் நடவடிக்கையோ இதுவரை நடைபெறவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார். மாநிலத்தின் உரிமையை பாதுகாக்கும் வகையில் அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்றார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
மக்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய மிக முக்கியமான பிரச்சினை
Image Credit : our own

மக்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய மிக முக்கியமான பிரச்சினை

"தமிழக முதல்வர் விஜய் இந்த விவகாரத்தில் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்? மத்திய அரசிடம் என்ன கோரிக்கை வைத்துள்ளார்? கர்நாடக அரசுடன் என்ன பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது? காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழகத்தின் நிலைப்பாடு என்ன?" என்று வினோஜ் பி. செல்வம் தொடர்ச்சியாக பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழு வழங்கும் உத்தரவுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நீர் காலதாமதமின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்காக சட்டரீதியான மற்றும் நிர்வாக ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என்றார்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் மற்றும் அதனை நம்பி சாகுபடி மேற்கொள்ளும் டெல்டா மாவட்ட விவசாயிகளின் நிலை குறித்து கவலை தெரிவித்த அவர், உரிய நேரத்தில் தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் குறுவை மற்றும் சம்பா சாகுபடிகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக குறிப்பிட்டார். எனவே விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி அரசு உடனடி முடிவுகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Related Articles

Related image1
Vijay TVK Party Success: விஜய்யின் அரசியல் எழுச்சிக்குப் பின்னணியில் யார்? சசிகுமார் கொடுத்த நெற்றிப்பொட்டு பதில்!
Related image2
Vijay Jana Nayagan: தமிழ் சினிமா ஹிஸ்ட்ரில இது 2-வது முறை! எம்.ஜி.ஆருக்கு அப்புறம் தளபதி விஜய் செய்த அரிய சாதனை!
33
அரசு தெளிவான தகவல்களை வெளியிட வேண்டும்
Image Credit : Asianet News

அரசு தெளிவான தகவல்களை வெளியிட வேண்டும்

காவிரி விவகாரத்தில் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் கூறினார். தமிழ்நாட்டின் நீர்வள உரிமையை பாதுகாப்பதில் அரசும், எதிர்க்கட்சிகளும் ஒரே குரலில் பேச வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அதேபோல், முதல்வர் விஜய் இந்த விவகாரம் குறித்து வெளிப்படையான விளக்கத்தை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்றும், தமிழக அரசு இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் அடுத்தகட்ட திட்டங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்றும் வினோஜ் பி. செல்வம் தெரிவித்தார். மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படாத வகையில் அரசு தெளிவான தகவல்களை வெளியிட வேண்டும் என்றார்.

ஊடகங்களும் காவிரி விவகாரத்தின் முக்கியத்துவத்தை மக்களிடம் தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இந்த விவகாரம் அரசியல் விமர்சனங்களுக்குள் மட்டுமே சுருங்காமல், தமிழ்நாட்டின் நீர்வள உரிமை மற்றும் விவசாயிகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கில் அணுகப்பட வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

காவிரி நீர் பகிர்வு தொடர்பான விவகாரம் ஏற்கனவே தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகளுக்கிடையே நீண்டகாலமாக நீடித்து வரும் முக்கிய பிரச்சினையாக உள்ளது. இந்த சூழலில் வினோஜ் பி. செல்வம் முன்வைத்துள்ள கேள்விகள் அரசியல் மட்டுமின்றி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியிலும் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. தமிழக அரசு இந்த விவகாரத்தில் என்ன பதில் அளிக்கிறது, முதல்வர் விஜய் தனது நிலைப்பாட்டை எப்போது வெளிப்படுத்துகிறார் என்பது அரசியல் வட்டாரங்களில் முக்கிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
அரசியல்
பிஜேபி
விஜய் (நடிகர்)
Latest Videos
Recommended Stories
Recommended image1
விவசாயிகளுக்கு மாதம் ரூ.30,000 சம்பளம்.?! வேளாண்துறைக்கு அள்ளிக் கொடுக்க போகும் தமிழக அரசு.! யாருக்கும் தெரியாத பட்ஜெட் சீக்ரெட்.!
Recommended image2
Kolathur EVM: கொளத்தூரில் EVM மோசடி? மாறுமா ரிசல்ட்? அடுத்து நடக்கப்போவது என்ன?
Recommended image3
Vijay TVK Party Success: விஜய்யின் அரசியல் எழுச்சிக்குப் பின்னணியில் யார்? சசிகுமார் கொடுத்த நெற்றிப்பொட்டு பதில்!
Related Stories
Recommended image1
Vijay TVK Party Success: விஜய்யின் அரசியல் எழுச்சிக்குப் பின்னணியில் யார்? சசிகுமார் கொடுத்த நெற்றிப்பொட்டு பதில்!
Recommended image2
Vijay Jana Nayagan: தமிழ் சினிமா ஹிஸ்ட்ரில இது 2-வது முறை! எம்.ஜி.ஆருக்கு அப்புறம் தளபதி விஜய் செய்த அரிய சாதனை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved