பெரியார் பற்றி ரஜினி பேசிய சர்ச்சையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவிக்கையில், “ரஜினி அரசியல்வாதி அல்ல. அவர் ஒரு நடிகர். பெரியார் குறித்து பேசும்போது சிந்தித்து நண்பர் ரஜினி பேச வேண்டும்” என்பதோடு முடித்துக்கொண்டார். எனவே பொதுவெளியில் ரஜினியைக் கண்டு திமுக பயந்துள்ளது என்று ரஜினி ரசிகர்களாலும் பாஜகவினராலும் கருத்துகள் பரப்பப்படுகின்றன. இந்நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகன், பெரியார் விஷயத்தில் ரஜினியை விமர்சித்துள்ளார்.
பெரியாரை பற்றி நடிகர் ரஜினிகாந்த்க்கு தலையும் தெரியாது, வாலும் தெரியாது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
துக்ளக் விழாவில் பெரியார் குறித்து ரஜினி பேசியது சர்ச்சையானதையடுத்து பாஜகவை தவிர்த்த பல அரசியல் கட்சிகளும் ரஜினியை விமர்சித்துவருகின்றன. அதிமுகவினர்கூட ரஜினியை விமர்சித்துவருகிறார்கள். ஆனால், திமுகவில் அந்த அளவுக்கு ரஜினியை விமர்சிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. முரசொலியைத் துக்ளக்குடன் ஒப்பிட்டு பேசியதை, முரசொலி தலையங்ககத்தில் ரஜினி பெயரைக் குறிப்பிடாமலேயே எழுதப்பட்டிருந்தது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி மட்டும் ரஜினியை ட்விட்டரில் மறைமுகமாக விமர்சித்திருந்தார்.

பெரியார் பற்றி ரஜினி பேசிய சர்ச்சையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவிக்கையில், “ரஜினி அரசியல்வாதி அல்ல. அவர் ஒரு நடிகர். பெரியார் குறித்து பேசும்போது சிந்தித்து நண்பர் ரஜினி பேச வேண்டும்” என்பதோடு முடித்துக்கொண்டார். எனவே பொதுவெளியில் ரஜினியைக் கண்டு திமுக பயந்துள்ளது என்று ரஜினி ரசிகர்களாலும் பாஜகவினராலும் கருத்துகள் பரப்பப்படுகின்றன. இந்நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகன், பெரியார் விஷயத்தில் ரஜினியை விமர்சித்துள்ளார்.

