Asianet News TamilAsianet News Tamil

பாஜக ஆட்சியில் ஒரு லட்சம் கோடியை இழக்க துணிவு... நாடாளுமன்றத்தில் கொந்தளித்த ஆ.ராசா!

தொலைதொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடாபோன் போன்ற நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய 1 லட்சம் கோடியை 20 ஆண்டு காலத்துக்கு தள்ளி வைப்பதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்நிலையில் இந்த விவகாரத்தை திமுக எம்.பி. ஆ.ராசா நாடாளுமன்றத்தில் எழுப்பினார். அப்போது அவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். 
 

DMK MP A.Raja attacked BJP Government in parliament
Author
Delhi, First Published Mar 18, 2020, 10:15 PM IST

2ஜி விவகாரத்தில் ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு என கற்பனையான குற்றச்சாட்டுகளைச் சொல்லி ஆட்சிக்கு வந்த பாஜக, இப்போது உண்மையிலேயே 1 லட்சம் கோடியை இழக்கத் துணிந்துள்ளது ஏன்?” என்று நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.யும் கொறாடவுமான ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

DMK MP A.Raja attacked BJP Government in parliament
தொலைதொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடாபோன் போன்ற நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய 1 லட்சம் கோடியை 20 ஆண்டு காலத்துக்கு தள்ளி வைப்பதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்நிலையில் இந்த விவகாரத்தை திமுக எம்.பி. ஆ.ராசா நாடாளுமன்றத்தில் எழுப்பினார். அப்போது அவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். 

DMK MP A.Raja attacked BJP Government in parliament
இந்த விவாகரம் குறித்து ஆ.ராசா பேசும்போது, “2ஜி விவகாரத்தில் ரூ. 1,76 லட்சம் கோடி இழப்பு எனக் கற்பனையாக குற்றம்சாட்டப்பட்டது. நீதிமன்றத்தில் அது குற்றமில்லை என நிரூபணமானது. ஆனால், அந்தப் பொய்க் குற்றச்சாட்டைப் பூதாகரமாக்கிதான் பாஜக ஆட்சிக்கு வந்தது. இதனால், நாங்கள் ஆட்சியையே காவுகொடுக்க நேர்ந்தது. ஆனால், இன்றைக்கு உண்மையிலேயே அரசுக்கு வரவேண்டிய வருவாய் 1 லட்சம் கோடியை இழக்க பாஜக அரசு துணிந்தது எப்படி? தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 20 ஆண்டுகாலம் சலுகை அளித்தது யார்?” என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.

DMK MP A.Raja attacked BJP Government in parliament
இதற்கு பதிலளித்த தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு உள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு 90 கோடி வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். தொலைத் தொடர்புத் துறை தொடர்ந்து இயங்க வேண்டும், நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கப்பட வேண்டும், நுகர்வோரின் விருப்பம் ஆகிய மூன்றும்தான் முக்கியம்” என்று தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios