Asianet News TamilAsianet News Tamil

நான் மூன்றாம் கலைஞரா ? உஷார் ஆன உதயநிதி.. இனி என்னை இப்படி கூப்பிடுங்க போதும்!

Udhayanidhi : என் மீது பாசம், அன்பு காட்டுவதாக நினைத்துக்கொண்டு கோஷம் போடும் போது மூன்றாம் கலைஞர், இளம் தலைவர் என அப்படியெல்லாம் அழைக்கிறீர்கள். எனக்கு இதில் துளிக்கூட விருப்பம் கிடையாது. 

DMK MLA Udhayanidhi Stalin speech about third kalaignar Udhayanidhi DMK cadres controversy
Author
First Published Jun 27, 2022, 7:51 AM IST

புதுக்கோட்டை திமுக

புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்ட திமுக சார்பில் உசிலங்குளம் தடிகொண்ட அய்யனார் திடலில் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் விழா, பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா, தொண்டரை போற்றுவோம் என முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் இளைஞர் அணி மாநில செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான கலந்து கொண்டார்.

DMK MLA Udhayanidhi Stalin speech about third kalaignar Udhayanidhi DMK cadres controversy

உதயநிதி பேச்சு

அப்போது பேசிய ஆவர், ‘தமிழகத்தில் கடந்த 3 தேர்தல்களில் திமுக கூட்டணிக்கு தமிழக மக்கள் மிகப்பெரிய வெற்றியை தந்தார்கள். இந்தியாவிலேயே 3-வதாக பெரிய இயக்கமாக திமுக இருக்கிறது. தந்தை பெரியார், அண்ணாவை நான் நேரில் பார்த்தது கிடையாது. கருணாநிதி, அன்பழகனை நேரில் பார்த்திருக்கிறேன். கட்சியின் அடிமட்ட தொண்டர்களையும், மூத்த நிர்வாகிகளையும் அண்ணா, பெரியாரின் மறு உருவமாக நான் பார்க்கிறேன். கட்சியில் உள்ள அனைவருக்கும் ஒரு அன்பு வேண்டுகோள் வைக்கிறேன்.

இதையும் படிங்க : AIADMK : "எடப்பாடிக்கு ஆதரவு கொடுக்கல.. அதிமுகவில் இருந்து தூக்கிடுவோம்" ஓபிஎஸ்சிடம் சரணடைந்த அதிமுக பிரமுகர்

சின்னவர்

என் மீது பாசம், அன்பு காட்டுவதாக நினைத்துக்கொண்டு கோஷம் போடும் போது மூன்றாம் கலைஞர், இளம் தலைவர் என அப்படியெல்லாம் அழைக்கிறீர்கள். எனக்கு இதில் துளிக்கூட விருப்பம் கிடையாது. கலைஞர் என்றால் அது ஒரே ஒரு கலைஞர் தான். என்னை சின்னவர் என்று அழைக்கிறார்கள். அது மகிழ்ச்சியாக உள்ளது. பெரியவர்களோடு ஒப்பிடும் போது நான் சின்னவர் தான். புதுக்கோட்டையில் இந்த திடலில் இதற்கு முன்பு நடந்த நிகழ்ச்சிகளில் பேசிய இந்திரா காந்தி பிரதமரானார், கருணாநிதி பல வெற்றிகளை கண்டுள்ளார். 

DMK MLA Udhayanidhi Stalin speech about third kalaignar Udhayanidhi DMK cadres controversy

மு.க ஸ்டாலின் முதல்வர் ஆனார். இந்த திடல் ராசியான திடல் என்று எனக்கு முன்பு பேசியவர்கள் கூறினார்கள். எனக்கு ராசி மீது நம்பிக்கை கிடையாது. உழைப்பின் மீது நம்பிக்கை உண்டு. இளைஞர் அணி சார்பில் திராவிட மாடல் பாசறை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனை சிலர் விமர்சித்திருப்பதை பார்க்கும் போது நாம் சரியான பாதையில் தான் செல்கிறோம் என்று நினைக்கிறேன்’ என்று பேசினார்.

இதையும் படிங்க : AIADMK : ஓபிஎஸ் போட்ட ஸ்கெட்ச்.. தர்மயுத்தம் 2.0 - எடப்பாடி எடுத்த கடைசி அஸ்திரம் ! கைகொடுக்குமா ?

இதையும் படிங்க : இரட்டை இலையை எவனுக்கும் விட்டுத் தர மாட்டோம்..களத்தில் குதித்த மாயத்தேவர் பாசறை.. யார் இந்த மாயத்தேவர்?

Follow Us:
Download App:
  • android
  • ios