“மாத்திரை இல்லை.... நீரிழிவு நோய் உள்ளது” ....எம்எல்ஏக்கள் புலம்புவதாக தகவல்....!!!
எம்எல்ஏக்கள் :
தற்போது சசிகலா ஆதரவு எம் எல் ஏக்கள் சிறைபிடித்து வைகபட்டுள்ளதாக வெளியான தகவை அடுத்து தற்போது , பல்வேறு தகவல்கள் வெலிஉஆகி உள்ளது.
மேலும், அந்தந்த ஊர் எம் எல் ஏக்கள் காணவில்லை என , பொதுமக்கள் புகார் தெரிவித்து வருவதும் ஒருபுறம் பார்க்க முடிகிறது
புலம்பல் :
இந்நிலையில், சில எம் எல் ஏக்கள் களுக்கு நீரிழிவு நோய் இருப்பதால், அவர்கள் தற்போது மாத்திரை கூட இல்லாமல் அவதிக்குள்ளாகி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
மேலும், அவர்கள் வேறு யாருடனும் தொடர்பு கொள்ள முடியாமல் தவிப்பதாகவும் , தினசரி என்ன நடக்கிறது என்பது கூட தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு, அவர்கள் தவித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், சிறைப்பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக வெளிவரும் தகவலை அடுத்து, தற்போது பல்வேறு கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து எழுந்த புகாரின் அடிப்படையில் தற்போது காவல் துறையினர் , எம்எல்ஏக்களை மீட்க திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
