இந்தியாவுக்கு ஒரு திறமையான உள்துறை அமைச்சர் தேவை. நமது எல்லைகளையும், நமது நகரங்களையும் பாதுகாப்பது அமித் ஷாவின் கடமையல்லவா? அவர் ஏன் எல்லா வகையிலும் இவ்வளவு மோசமாகத் தோல்வியடைகிறார்

டெல்லியில் நடந்த குண்டுவெடிப்புக்குப் பிறகு, பாதுகாப்பு குறித்து மத்திய அரசு எதிர்க்கட்சிகளின் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறது. காங்கிரஸ் உட்பட பல எதிர்க்கட்சிகள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் விளக்கம் கேட்டு வருகின்றன. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட், ‘‘அமித் ஷா ஒரு தோல்வியுற்ற உள்துறை அமைச்சர்’’ என கடுமையாக விமர்சித்துள்ளார். 7 மாதங்களில் 41 இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். டெல்லியில் நடந்ததற்கு யார் பொறுப்பு?

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தலைநகரான டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டட்டுள்ளனர். நேற்று மட்டும், ஃபரிதாபாத்தில் 360 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் எப்படி அங்கு சென்றார்? அந்த சோகம் எவ்வளவு மோசமாக இருந்திருக்கும்? ஏழு மாதங்களுக்கு முன்பு, பஹல்காமில் ஒரு கொடூரமான பயங்கரவாத தாக்குதல் நடந்தது, இப்போது டெல்லியில் இது நடந்துள்ளது. யார் பொறுப்பு?

"உள்துறை அமைச்சர் எங்கே? பிரதமர் எங்கே? இந்தியர்கள் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். ஆனால், இந்த இருவருக்கும் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்ல மட்டுமே நேரமிருக்கிறது. அவர்களிடம் எந்த பொறுப்புக்கூறலும் இல்லை. ஏழு மாதங்களில் 41 இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அமித் ஷா ஒரு தோல்வியடைந்த உள்துறை அமைச்சர். டெல்லி காவல்துறையின் கட்டுப்பாட்டில் யார் இருக்கிறார்கள்? எல்லைப் பாதுகாப்பிற்கு யார் பொறுப்பு? ஐபி யாருக்கு அறிக்கை அளிக்கிறது?

பெரிய பேச்சுக்கள் உங்கள் தோல்விகளையும், மீண்டும் மீண்டும் நிகழும் கடுமையான பாதுகாப்பு குறைபாடுகளையும் மறைக்க முடியாது. அப்பாவி உயிர்கள் இழந்தால், கேள்விகள் எழுப்பப்படும். பொறுப்புக்கூறல் தீர்மானிக்கப்படும். ஏனெனில் நாடு பாதுகாப்பான கைகளில் இல்லை’’ என சுப்ரியா ஷ்ரினேட் ஆத்திரத்தை வெளிபடுத்தி உள்ளார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா இதுகுறித்து ‘‘18 மணி நேரம் ஆகிவிட்டன. ஆனால் வதந்தி பரவுவதைத் தடுக்க உள்துறை அமைச்சர் தன்னால் முடிந்த அனைத்து தகவல்களையும் வழங்க வேண்டும். சமூக ஊடகங்கள், ஊடகங்களில் உள்ள ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட பரப்பப்படும் கோட்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். உள்துறை அமைச்சரின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தாதது, தேர்தல் நடைபெறும் மாநிலத்தில் ஒரு ஹோட்டல் அறையில் முகாமிட்டிருப்பது, சிசிடிவி காட்சிகளை தவிர்ப்பபதில் கவனம் செலுத்துகிறார்கள்.

பஹல்காம் சம்பவம் நடந்தபோது, ​​பிரதமர் சவுதி அரேபியாவுக்கான தனது பயணத்தை கைவிட்டார். இப்போது, ​​டெல்லி குண்டுவெடிப்பு நடந்தபோது, ​​அவர் பூட்டானுக்குச் சென்றார். அவர் ஏன் வெளியேறினார்? வேறு எந்த பிரதமராக அங்கு இருந்திருந்தாலும், அவர்கள் நாட்டைப் பற்றி கவலைப்பட்டிருப்பார்’’ எனக் குற்றசாட்டியுள்ளார். மம்தா பானர்ஜியின் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் இந்த விஷயத்தில் மத்திய அரசைக் குறிவைத்துள்ளது. இந்தியாவுக்கு ஒரு திறமையான உள்துறை அமைச்சர் தேவை. நமது எல்லைகளையும், நமது நகரங்களையும் பாதுகாப்பது அமித் ஷாவின் கடமையல்லவா? அவர் ஏன் எல்லா வகையிலும் இவ்வளவு மோசமாகத் தோல்வியடைகிறார்? என அக்கட்சியின் எம்பி மஹுவா மொய்த்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.