இதோ பேபிம்மா தீபா வந்துட்டாங்க.... தனித்து போட்டியிட்டு பலம் காட்ட முடிவாம்!
இருக்கிறாரா இல்லையா என்று தெரியாத அளவுக்கு தொலைத் தொடர்புக்கு அப்பால் இருந்த எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை செயலாளர் ஜெ. தீபா திடீரென தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை எல்லா கட்சிகளும் ஜனவரியிலிருந்தே தொடங்கிவிட்டன. கூட்டணிகள் இறுதி செய்யப்பட்டு, கட்சிகள் தேர்தலுக்கு தயாராகிவிட்டன. இத்தனை நாளாக எங்கே இருக்கிறார் என்று சொல்லும் அளவுக்கு தேர்தல் பற்றி ஜெ. தீபா எந்த ஒரு கருத்தையும் வெளியிடாமல் இருந்தார். 2017 ஏப்ரலில் ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் அறிவித்தபோது அவருக்கு இருந்த ஆர்வம் எல்லாம் இப்போது இல்லாமல் போயிருந்தது.
அவருடைய அமைதியின் காரணமாக இந்த முறை ஜெ. தீபா தேர்தல் களத்துக்கு வர மாட்டார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக தற்போது மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக ஜெ.தீபா அறிவித்துள்ளார். தமிழகத்தில் வேட்பு மனுத்தாக்கல் தொடங்க இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டு தமிழக அரசியலை பரப்பரப்புக்குள்ளாகி இருக்கிறார்!
இதுதொடர்பாக தீபா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மக்களவை மற்றும் 18 சட்டப் பேரவைத் தேர்தலில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 16, 17 தேதிகளில் விருப்பம் னுக்களை பெற்று கட்சி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்குமாறு” தெரிவித்துள்ளார்.