Asianet News TamilAsianet News Tamil

கொரோனா; உசுறா..?பணமா..? உசுறுதான் முக்கியம் என நிருபித்திருக்கிற சம்பவம் பீகாரில் அரங்கேறியிருக்கிறது.!!

கொரோனா பீதியில் கீழே கிடக்கும் பணத்தைக்கூட மக்கள் யாரும் எடுக்க முன்வராமல் சாலையில் அந்த பணம் அப்படியே கிடந்துள்ளது.அந்த பணத்தை உரியவரிடம் போலீசார் ஒப்படத்திருக்கிறார்கள்.
 

Corona  Panama? Bihar
Author
Bihar, First Published May 2, 2020, 12:22 AM IST

T.Balamurukan
கொரோனா பீதியில் கீழே கிடக்கும் பணத்தைக்கூட மக்கள் யாரும் எடுக்க முன்வராமல் சாலையில் அந்த பணம் அப்படியே கிடந்துள்ளது.அந்த பணத்தை உரியவரிடம் போலீசார் ஒப்படத்திருக்கிறார்கள்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கஜேந்திர சா என்பவர் சாலையில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, தனது பாக்கெட்டில் இருந்த ரூ.25 ஆயிரம் பணத்தை எப்படியோ கீழே தவறவிட்டுள்ளார்.


 அவர் பணம் தவறியது கூட தெரியாமல் கடைக்குச் சென்றுள்ளார். அங்கு பொருள்களை வாங்கிவிட்டு பாக்கெட்டில் பணத்தை பார்த்திருக்கிறார்.பணம் இல்லை . வந்த வழியே திரும்பி சென்ற போது போலீசார் அந்த பணத்தை மக்களிடம் விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.
 அதுவரைக்கும், மக்கள் கொரோனா காரணமாக அந்தப் பணத்தை எடுக்காமல் விட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார் உரிய பாதுகாப்பு முறையுடன் பணத்தை எடுத்து சென்றுள்ளார் கஜேந்திரா. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios