Asianet News TamilAsianet News Tamil

திருமாவளவனை கொலை செய்ய சதி.??? கத்தியுடன் நுழைந்த வாலிபர்.. விடுதலை சிறுத்தைகள் அதிர்ச்சி..

16ஆம் தேதி இரவு சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் அவரது பிறந்தநாள் நிகழ்ச்சி ஆரவாரமாக கொண்டாடப்பட்டது.

Conspiracy to kill Thirumavalavan? The young man who entered with a knife .. Liberation leopards shock ..
Author
Chennai, First Published Aug 20, 2021, 9:47 AM IST

விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்ற நிகழ்ச்சியில் இளைஞர் ஒருவர் கத்தியுடன் நுழைந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்பட்டுள்ளது அந்த நபர் மீது சந்தேகமடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அவரை சுற்று வளைத்து தாக்கியதுடன் போலீஸிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் திருமாவளவன் உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவனின் 59வது பிறந்தநாள் நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் அக்கட்சித் தொண்டர்கள் கோலாகலமாகக் கொண்டாடினார்.

16ஆம் தேதி இரவு சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் அவரது பிறந்தநாள் நிகழ்ச்சி ஆரவாரமாக கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் சிறுபான்மையினர் நல வாரிய தலைவருமான பீட்டர் அல்போன்ஸ், வக்பு போர்டு தலைவர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விடுதலை சிறுத்தைகள் தலைவர். திருமாவளவனை பாராட்டி பேசினர். 

Conspiracy to kill Thirumavalavan? The young man who entered with a knife .. Liberation leopards shock ..

அதனைத் தொடர்ந்து மதுரை அருகே தனியார் மண்டபத்தில் நேற்று திருமாவளவன் கலந்துகொண்ட கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை ஏற்ற அவர் அதில் சிறப்புரையாற்றினார். அப்போது கருத்தரங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அரங்கத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் கத்தியுடன் காணப்பட்டார். இது அங்கிருந்தவர்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பையும், அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள்.

அந்த நபர் மீது பாய்ந்து, சுற்றிவளைத்து தாக்கத் தொடங்கினர். பின்னர் போலீசாரிடம் அந்த நபரை ஒப்படைத்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த நபர் சோழவந்தானைச் சேர்ந்த மாரீஸ்வரன் (28) என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அந்த நபர் யார், அவர் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்,  எதற்காக அவர் கத்தியுடன் விடுதலை சிறுத்தைகள் நிகழ்ச்சி அழங்கிற்குள் நுழைந்தார், ஒருவேளை விசிக தலைவர் திருமாவளவனை கொலை செய்ய முயற்சியில் அவர் வந்தாரா.? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. 

Conspiracy to kill Thirumavalavan? The young man who entered with a knife .. Liberation leopards shock ..

அந்த நபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பலமுறை கூறி வந்த நிலையில், அதே போல ஒரு  நபர்  கத்தியுடன் அவரது கூட்டத்திற்குள் நுழைந்திருப்பது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios