Asianet News TamilAsianet News Tamil

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு நன்கொடை கொடுக்க மறுப்பு !! கண்ணாடிகளை உடைத்து வன்முறை வெறியாட்டம் போட்ட இந்து முன்னணி !!

திருப்பூர் அருகே விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு நன்கொட கொடுக்க மறுத்த பனியன் கம்பெனி மீது இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் பெரும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அந்த நிறுவனத்தில் கண்ணாடிகள உடைக்கப்பட்டன.

company attack by hindu munnani
Author
Tirupur, First Published Sep 5, 2019, 10:37 PM IST

திருப்பூரில் உள்ள அங்கேரிபாளையம் பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணியினர் அங்குள்ள  தனியார் பனியன் நிறுவனத்துக்குச் சென்று  விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு நன்கொடை தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஏற்கனவே தான் மற்றொரு குழுவிற்கு  தந்து  விட்டதாகவும் இன்னொரு முறை தர முடியாது என மறுத்துள்ளார்.

இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த இந்து முன்னனியினர் அந்த பனியன் நிறுவனத்தின் மீது  தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பனியன் கம்பெனியின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது மட்டுமின்றி, ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

company attack by hindu munnani

தாக்குதல் நடத்தும் கும்பல், கையில் கிடைத்த பல்ப்புகளைக் கொண்டு பனியன் கம்பெனி ஊழியர்களை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக பனியன் கம்பெனி கொடுத்த புகாரின் அடிப்படையில், அனுப்புர்பாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக ஒரு குழுவிற்கு பணம் தந்து, மற்றொரு குழுவிற்கு பணம் தரவில்லை என்பதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Follow Us:
Download App:
  • android
  • ios